ஈழத் தமிழர்களுக்குப் பணம் வந்தது குறித்து விசாரிக்க இன்டர்போலை நாடும் ஐபி-ரா
கொல்லம் ரயில் நிலையம் அருகேயுள்ள தனியார் விடுதியில் தங்கியிருந்த 37 ஈழத் தமிழர்கள் களை நேற்று முன்தினம் நள்ளிரவு போலீசார் கைது செய்து கொல்லம் காவல்துறை கட்டுப்பாட்டு அறையில் வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
பிடிபட்ட 37 பேரில் முல்லைதீவை சேர்ந்த புரோக்கர் டென்னீசன் என்பவரை கேரள காவல்துறையினர் தனி இடத்தில் வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர். விசாரணையில் அவர் முல்லைதீவு மற்றும் இலங்கையின் பல்வேறு பகுதியைச் சேர்ந்தவர்களை இவரும் (டென்னீசன்) மற்றும் சிவா என்பவரும் படகுகள் மூலம் அழைத்து வந்து கேரளா வழியாக கனடா, ஆஸ்திரேலியா, உள்ளிட்ட நாடுகளுக்கு கடல் மார்க்கமாக அனுப்பி வைப்பதும், அதற்காக ஒரு நபருக்கு ரூ.2 லட்சம் முதல் 5 லட்சம் வரை கட்டணம் வசூலித்து வருவதும் தெரிய வந்துள்ளது. இதை தொழிலாகவே செய்து வருகிறார்களாம் டென்னீசனும், சிவாவும்.
சிவாவைப் பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டுள்ளதாகவும் போலீஸ் தரப்பில் கூறப்படுகிறது. தற்போது பிடிபட்டுள்ள 36 பேரும் கடந்த ஏப்ரல் 26ம் தேதி கொச்சிக்கு அழைத்து வரப்பட்டு அங்கிருந்து கடந்த 5ம் தேதி கொல்லம் அழைத்து வரப்பட்டு தங்க வைக்கப்பட்டதாகவும் தெரிய வந்துள்ளது.
கேரள வழியாக இலங்கை தமிழர்களை அழைத்து செல்லும் நபர்கள் யார், எங்கிருந்து பணம் சப்ளை செய்யப்படுகிறது என்பது உள்ளிட்ட பல்வேறு தகவல்களையும் டென்னீசனிடமிருந்து கேட்டு வருகிறது காவல்துறை.
பிடிபட்டுள்ள 36 பேரையும் தனியாக விசாரணை நடத்த ஐபி, ரா முடிவு செய்துள்ளது. மேலும் இவர்களிடம் விசாரணை நடத்த டெல்லியில் இருந்து உயர் அதிகாரிகள் இன்று கொல்லம் வருகின்றனர்.
இலங்கையில் விடுதலை புலிகளுக்கும், ராணுவத்துக்கும் நடந்த சண்டையில் பொருளாதார ரீதியிலும் முல்லைதீவு தமிழர்கள் பெரும் பாதிப்பை சந்தித்த நிலையில், கனடா, ஆஸ்திரேலியா செல்ல லட்சக்கணக்கில் பணம் செலவழிக்க இவர்களிடம் பணம் எப்படி வந்தது, இவர்களுக்கு பணசப்ளை செய்தது யார், எங்கிருந்து பணம் வருகிறது என்பது குறித்து ரா மற்றும் ஐபி அமைப்புகளுக்கு சந்தேகம் வந்துள்ளதாம்.
இதற்கு விடை காணும் விதமாக இவர்களின் பிண்ணனி குறித்து விசாரிக்க இண்டர்போல் உதவியை நாடவு ஐபி, ரா முடிவுசெய்துள்ளதாகவும் தெரிகிறது.
இதற்கிடையே, கொல்லத்தில் கைது செய்யப்பட்ட புரோக்கர் டென்னீசனை இன்று கொல்லம் மாவட்ட நீதிபதி முன்பு ஆஜர்படுத்தி அவரை போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க உள்ளனர்.
-
NDA கூட்டணியில் தவெக? துணை முதல்வராகிறாரா விஜய்? சாணக்கியத்தனத்தை சொல்லி கொடுத்த பிரபல நடிகர் -
“சவுதியிலிருந்து உடனே வெளியேறுங்கள்..” முதல் முறையாக அறிவித்த அமெரிக்கா! ஆக்ரோஷமான ஈரான் -
விஜய்க்கு எதிராக வெளியான வீடியோ.. அதிர்ந்து போன நடிகை அம்பிகா! ஆதங்கத்துடன் பதிலடி -
அமெரிக்கா மீது இடியை இறக்கிய ஈரான்! டிரம்ப் மீது மக்கள் அதிருப்தி! இதுக்கு சும்மாவே இருந்திருக்கலாம் -
திருப்பூரில் இப்படியும் ஒரு புருஷன்.. எந்த கணவனும் செய்யக்கூடாத காரியம்.. ஆடிப்போன மனைவி -
Next CM: தமிழகத்தில் ஆட்சியை பிடிப்பது யார் தெரியுமா? சித்தர் கணிப்பை பாருங்க! அப்போ விஜய்? -
நியூசிலாந்து தொடரால் உடைந்துவிட்டேன்.. கிரிக்கெட் கடவுள் செய்த அட்வைஸ்.. நெகிழும் சஞ்சு சாம்சன்! -
எடப்பாடி கோட்டையில் திமுகவுக்கு ஷாக்! அதிமுகவுக்கு தாவிய முன்னாள் எம்.எல்.ஏ! -
படக்குனு 10 கிராமாவது வாங்கிப் போடுங்க! 19,000 சரிவில் தங்க விலை! அள்ளிப் போட இது தான் சரியான நேரம்! -
90, 60, 55, 25: தமிழகத்தின் அடுத்த முதல்வர் இவர்தான்? 2 துணை முதல்வர்கள் யார்? பலே பாஜக.. அப்ப விஜய் -
செவ்வாழை ரகசியம்: 48 நாட்கள் தொடர்ந்து பழத்தை சாப்பிட்டால் உடலில் நடக்கும் அந்த அதிசயம்..! -
வாடகை வீடுகளில் வசிக்கிறீங்களா? வந்தது 'பம்பர்' பரிசு.. மத்திய அரசின் புது வாடகை விதி! நோட் பண்ணுங்க













Click it and Unblock the Notifications