பாலியல் புகாரில் சிக்கிய ஹாலப்பா சரண்
Subscribe to Oneindia Tamil
நண்பரின் மனைவியை கற்பழித்த வழக்கில் சிக்கிய கர்நாக மாஜி அமைச்சர் ஹாலப்பா சரண்
ஷிமோகா நண்பர் வீட்டில் இரவில் தங்கியபோது அவரது மனைவியை கற்பழித்த்தாக எழுந்த சர்ச்சையால் பதவியிலிருந்து விலகிய மாஜி அமைச்சர் ஹாலப்பா இன்று ஷிமோகா போலீஸ் எஸ்.பியிடம் சரணடைந்தார்.
கர்நாடக மாநிலத்தில் அமைச்சராக இருந்தவர் ஹாலப்பா. இவர் தனது நண்பரின் மனைவி சந்திரவதியை, கற்பழித்ததாக சர்ச்சை எழுந்தது. இதையடுத்து ஹாலப்பா பதவி விலகினார்.
அதன் பின்னர் சிஐடி போலீஸார் அவர் மீது வழக்கு தொடர்ந்தனர். இதைத் தொடர்ந்து ஹாலப்பா தலைமறைவாகி விட்டார்.
நாளைக்குள் அவர் சரணடைய வேண்டும் என்று போலீஸார் கெடு விதித்திருந்தனர். இந்தநிலையில் இன்று ஷிமோகா எஸ்.பி.அலுவலகத்தில் ஹாலப்பா சரணடைந்து விட்டார்.












Click it and Unblock the Notifications