தலித் சுடுகாட்டை மீட்டுத்தர முதல்வருக்கு சிபிஎம் கோரிக்கை
தூத்துக்குடி: தூத்துக்குடி அருகே உள்ள சோரிஸ்புரம் தலித் மக்களுக்கு சொந்தமான சுடுகாட்டை தமிழக முதல்வர் கருணாநிதி மீட்டுத்தர வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வேண்டுகோள் விடுத்துள்ளது.
இது குறித்து தமிழக முதல்வர் கருணாநிதிக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன் எழுதியுள்ளார். அதன் விவரம் :
தூத்துக்குடி தாலுகா அய்யனடைப்பு ஊராட்சி சோரிஸ்புரம் பகுதியில் 170 தலித் குடும்பங்கள் வசித்து வருகின்றனர்.
இந்த ஊராட்சியைச் சேர்ந்த பாளையங்கோட்டை சாலை அருகே உள்ள பக்கிள் ஓடை புறம் போக்கு நிலத்தை கடந்த 75 வருடங்களாக தலித் மக்களின் மயானத்திற்காக சுமார் 1 ஏக்கர் இடத்தை பயன்படுத்தி வருகின்றனர்.
தற்போது சோரிஸ் குடும்பத்தைச் சேர்ந்த வாரிசு தாரர்கள் எனக் கூறிக்கொள்ளும் சிலர் மயானத்தை ஆக்கிரமித்து, வேலி போட்டு அடைத்துள்ளனர்.
இதனால் மயானமும் அதற்குரிய பாதையும் அடைபட்டு, சோரிஸ்புரம் தலித் மக்கள் மயானம் பறிக்கப்பட்டுள்ள நிலையில் தவிக்கின்றனர். இந்த செயல் சட்டத்திற்கும், சமூக நீதிக்கும் புறம்பானது ஆகும்.
இது சம்பந்தமாக தூத்துக்குடி மாவட்ட ஆட்சித் தலைவரிடம் இம் மக்கள் புகார் செய்துள்ளனர். ஆனால், இதுவரை இந்த மயானம் மீட்கப்படவில்லை.
எனவே, தாங்கள் இந்த பிரச்சனையில் தலையிட்டு தலித் மக்கள் பயன்படுத்தம் சுடுகாட்டை மீட்டுத்தருமாறு வேண்டுகின்றேன்.
இவ்வாறு அவர் அந்த கடிதத்தில் கூறியுள்ளார்.
-
இந்தோனேஷிய கடலில் அது பாட்டுக்கு போகுது.. உலகமே வியப்பில் உறைந்திருச்சு! விலகிய 40 கோடி வருஷ மர்மம் -
விலகினார் திருமாவளவன்.. சட்டசபை தேர்தலில் போட்டியில்லை என அறிவிப்பு.. பின்வாங்கியது ஏன்? விளக்கம் -
ஈரான் போரை வைத்து பணம் பார்க்கும் டிரம்ப் வாரிசுகள்.. நடுவில் சிக்கிக்கொண்ட அரபு நாடுகள்! -
சிங்காநல்லூர் காங்கிரஸ் வேட்பாளர் ஶ்ரீநிதி அண்ணாமலை ஆதரவாளராமே.. போராட்டத்தில் குதித்த கதர்கள் -
அமெரிக்க கோட்டையில் ஓட்டை! ஈரானின் 'துல்லிய' ட்ரோன் தாக்குதல்: சிதறிய சி.ஐ.ஏ ரகசியங்கள்! -
Sundar C: ஏங்க கனிமொழி மட்டும் தூத்துக்குடிக்காரங்களா? நானும் மதுரைக்காரன்தான்! சுந்தர் சி விமர்சனம் -
தமிழ் புத்தாண்டு பலன்: விருச்சிக ராசிக்கு 9 இல் குரு.. தொட்டதெல்லாம் தங்கமாகப் போகுது -
குஷ்புவிடம் 3.5 கிலோ தங்கம், 24.3 கிலோ வெள்ளி இருக்கு.. சுந்தர்.சி சொத்து மதிப்பு எவ்வளவு? -
டாக்டர் படிப்பை முடித்த அனிதா சம்பத்.. உருக்கமாக சொன்ன தகவல்! கடைசியில் இப்படி ஆகிடுச்சே! -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் உச்சவரம்பு நீக்கம்.. ரிசர்வ் வங்கி மக்களுக்கு ஜாக்பாட்.. சாதக, பாதகம் என்ன -
“திருச்சுழியில் போட்டியிட விருப்பமனுவே தராத என்னை அனுப்பிட்டாங்க” அதிமுக வேட்பாளர் ராஜவர்மன் குமுறல் -
Heavy Rain: கனமழை பிச்சு உதறும்.. கோவை, நீலகிரி, தேனியில் இடி, மின்னலுடன் வெளுத்து வாங்கும்.. வானிலை எச்சரிக்கை












Click it and Unblock the Notifications