ரூ.56,000 கோடியைத் தாண்டியது 3ஜி ஏலம்!

இதன்மூலம் எதிர்பார்கக்ப்பட்டதை விட ரூ. 21,000 கோடி அதிக வருவாய் கிடைத்துள்ளது.
3ஜி ஸ்பெக்ட்ரம் அலைக்கற்றை ஏலம் கடந்த ஒரு மாதமாக நடந்து வருகிறது. நகரங்கள் மற்றும் மண்டல வாரியாக நடக்கும் இந்த ஏலம் இன்னும் முடிவுக்கு வரவில்லை. எதிர்ப்பார்க்கப்பட்டதை விட அதிக அளவு நிறுவனங்கள் இந்த ஏலத்தில் பங்கேற்று வருகின்றன.
இந்த ஏலம் மூலம் ரூ.30,000 கோடி முதல் ரூ.35,000 கோடி வரை கிடைக்கும் என மத்திய அமைச்சர் ராசா கூறினார். ஆனால் இன்னும் ஏலம் முழுமை பெறாத நிலையில் ரூ.56,631 கோடி வரை வருவாய் உறுதியாகியுள்ளது. எப்படியும் ரூ.60,000 கோடியை இது தாண்டிவிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
3ஜி சேவைகள் ஏலத்துக்கான அடிப்படைத் தொகையாக ரூ. 3,500 கோடி நிர்ணயிக்கப்பட்டது. இந்த ஏலத்தில் இதுவரை மும்பை மண்டலம் அதிகபட்சமாக ரூ.2,558 கோடிக்கு ஏலம் கேட்கப்பட்டுள்ளது. டெல்லி ரூ.2,551 கோடிக்கும், உபி (மேற்கு) ரூ.413 கோடிக்கும், பிகார் ரூ.141 கோடிக்கும் கேட்கப்பட்டுள்ளது.
ஏலத்தின் 28வது நாள் இன்று என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications