ஐஏஎஸ் தேர்வு-தென்காசி உளவுத்துறை அதிகாரி வெற்றி
தென்காசி: தென்காசியை சேர்ந்த மத்திய உளவுத்துறை அதிகாரி ஐஏஎஸ் தேர்வில் வெற்றி பெற்றுள்ளார்.
தென்காசி வாய்கால்பாலம் பகுதியை சேர்ந்தவர் முருகன் மத்திய உளவுப் பிரிவான ஐ.பியில் பணிபுரிகிறார்.
தற்போது நாகலாந்து மாநிலத்தில் பணியாற்றும் இவர் ஐஏஎஸ் தேர்வு எழுதினார். ஆறு முறை தோல்வியை சந்தித்த இவர் 7வது முறையாக அகில இந்திய அளவில் 327வது ரேங்க் பெற்று வெற்றி பெற்றுள்ளார்.
முருகனின் தந்தை பெயர் நம்பிராஜன், தாயார் சரஸ்வதி. விவசாயினான நம்பிராஜன் சிறுவயதிலேயே முருகனை தனது உறவினரான பெருமாள்-மீனாட்சி தம்பதியிடம் தத்து கொடுத்தார்.
தது வெற்றி குறித்து முருகன் கூறுகையில், எனது வளர்ப்பு பெற்றோர் என்னை ஊக்குவித்ததால் இந்த அளவுக்கு வெற்றி பெற்றுள்ளேன். பல முறை தோல்வி அடைந்த போதும் என்னை உற்சாகப்படுத்தினர். விடாமுயற்சி இருந்தால் எந்த காரியத்திலும் வெற்றி பெறலாம். ஐஏஎஸ் தேர்வில் வெற்றி பெற்றதன் மூலம் மக்களுக்கு சேவை செய்ய எனக்கு வாய்ப்பு கிடைத்துள்ளது என்றார்.












Click it and Unblock the Notifications