நிதாரி கொலை-சுரீந்தர் கோலிக்கு தூக்கு தண்டனை
காஷியாபாத்: நிதாரியில் நடந்த பெண்கள், சிறுமிகளின் 19 கொலைகளில் 2வது கொலை வழக்கி்ல் சுரீந்தர் கோலிக்கு தூக்கு தண்டனை விதித்து சிபிஐ நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
டெல்லியை அடுத்த நொய்டா அருகே உள்ள நிதாரி கிராமத்தில் சிறுமிகள், பெண்கள் என 19 பேரை கற்பழித்து கொலை செய்த தொழிலதிபர் மொகிந்தர் சிங் பந்தேர், அவரது வீட்டு வேலைக்காரர் சுரீந்தர் கோலி ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.
இவர்களது பங்களாவை ஒட்டியுள்ள சாக்கடையில் பெண்கள், சிறுமிகளின் அழுகிய உடல்கள், எலும்புக் கூடுதல் கிடைத்தன. இவர்களை வீட்டுக்குள் வரவழைத்து கற்பழித்து கொலை செய்து உடல்களை பாதாள சாக்கடையில் வீசி வந்துள்ளனர்.
அவர்கள் மீது உத்தரப் பிரதேச மாநிலம் காஷியாபாத் சி.பி.ஐ. சிறப்பு நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டது.
முதல் கட்டமாக சிறுமி ரிம்பா கொலை வழக்கில் மொகிந்தர் சிங், சுரேந்தர் கோலி ஆகிய 2 பேருக்கும் தூக்கு தண்டனை விதித்து கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் தீர்ப்பு கூறியது.
இதை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டு மனுவை விசாரித்த அலகாபாத் உயர் நீதிமன்றம் வழக்கில் மொகிந்தர் சி்ங்கை விடுதலை செய்தது.
இந் நிலையில் 7 வயது சிறுமியாந ஆர்த்தியை கற்பழித்து கொலை செய்த வழக்கில் சுரீந்தர் கோலிக்கு தூக்கு தண்டனை விதித்து இன்று சி.பி.ஐ. சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. இது தவிர மேலும் 17 கொலை வழக்குகளில் தீர்ப்புகள் வெளியாக வேண்டியுள்ளது.












Click it and Unblock the Notifications