எகிப்து நாட்டில் 52 கொத்தடிமை தமிழர்கள்-மீட்குமாறு அழகிரியிடம் கோரிக்கை!

கரூர் மாவட்டம் மஞ்சம்பட்டியைச் சேர்ந்த ரவி என்பவர், எகிப்து நாட்டில் டெல்டா பேக் அண்டு டெல்டா பிளாஸ்ட் என்ற நிறுவனத்தில் மாதம் ரூ. 25,000 சம்பளத்தில் வேலை வாங்கித் தருவதாக மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே உள்ள அசோக் நகரைச் சேர்ந்த கணேசனிடம் கூறியுள்ளார்.
இதை நம்பி கணேசனும், திருமங்கலம் ஜவஹர் நகரைச் சேர்ந்த பாலமுருகனும் (38) தலா ரூ. 50,000த்தை ரவியிடம் விசா, டிக்கெட் கொடுத்துள்ளனர்.
இதையடுத்து இரண்டு ஆண்டுகள் பணி ஒப்பந்த அடிப்படையில் கடந்த 2009ம் ஆண்டு அக்டோபர் 21ம் தேதி கணேசனும், பாலமுருகனும் எகிப்து சென்றனர்.
எகிப்து நாட்டில் அக்டோபர் சிட்டி என்ற ஊரில் உள்ள டெல்டா பேக் அண்டு டெல்டா பிளாஸ்ட் நிறுவனம் பாலித்தீன் சாக்கு தயாரிக்கும் நிறுவனத்தில் வேலைக்குச் சேர்ந்தனர்.
ஆனால், அத்துடன் அவர்களுடனான தொடர்பு துண்டிக்கப்பட்டுவிட்டது. கணேசனும், பாலமுருகனும் வீட்டிற்கு கடந்த 7 மாதங்களாக பணம் அனுப்பவில்லை. அவர்களை தொடர்பு கொள்ளவும் குடும்பத்தாரால் முடியவில்லை.
இந் நிலையில், சில தினங்களுக்கு முன் எகிப்தில் இருந்து தொடர்பு கொண்ட கணேசனும், பாலமுருகனும் தாங்கள் ஓய்வே இல்லாமல் 18 மணி நேரம் வேலை செய்ய வைக்கப்படுவதாகவும், அடித்து கொடுமைப்படுத்தப்படுவதாகவும், கொத்தடிமைகளாக அடைத்து வைக்கப்பட்டுள்ளதாகவும், பட்டினியோடு சித்ரவதைக்கு உள்ளாகி வருவதாகவும் கூறியுள்ளனர்.
இதே போன்று திண்டுக்கல் மாவட்டம், சின்னாளபட்டியைச் சேர்ந்த நவநீதம் என்பவர் உள்பட தமிழகத்தைச் சேர்ந்த 52 தொழிலாளர்கள் இங்கு சிக்கியிருப்பதாகவும் தெரிவித்தனர்.
தங்களை மீட்குமாறு மத்திய ரசாயனம் மற்றும் உரத்துறை அமைச்சர் மு.க.அழகிரிக்கும் தகவல் அனுப்பியுள்ளனர்.
இவர்களது பிரச்சனை குறித்து தேசிய மனித உரிமை ஆணையத்திடமும் புகார் செய்யப்பட்டுள்ளது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications