2 நெல்லை போலீசாருக்கு திருடர்கள் கத்திக்குத்து!
மதுரை: மதுரையில் பல்வேறு ஆவணங்களில் இன்ஸ்பெக்டரின் கையெழுத்திட்டு மோசடி செய்த ஏட்டு சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.
மதுரை ஜெய்ஹிந்த்புரம் குற்றப் பிரிவில் ஏட்டாக பணியாற்றியவர் சின்னனன் (45). இந்தப் பிரிவி்ன் இன்ஸ்பெக்டராக இருப்பவர் சாமிநாதன்.
சின்னனன் போலீஸ் ஆய்வுக்காக வரும் பாஸ்போர்ட் விண்ணப்பங்களில், சரிபார்க்கப்பட்டது என இன்ஸ்பெக்டர் பெயரில் காவல்துறை முத்திரையிட்டு போலி கையெழுத்திட்டு பல்வேறு மோசடிகளில் ஈடுபட்டுள்ளார்.
மதுரை பாஸ்போர்ட் அலுவலகத்திலிருந்து விண்ணப்பங்கள் ஸ்டேஷனுக்கு திருப்பி அனுப்பியபோது தான், போலி கையெழுத்து விவகாரம் தெரியவந்தது.
இதையடுத்து, இந்த சம்பவம் குறிதத்து மதுரை போலீஸ் கமிஷனர் பாலசுப்ரமணியத்திடம் இன்ஸ்பெக்டர் சாமிநாதன் புகார் செய்தார்.
புகாரின் பேரில் ஏட்டு சின்னனன் மீது மோசடி உட்பட நான்கு பிரிவுகளில் மத்திய குற்றப் பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்தனர். இதனால் அவர் தலைமறைவாகிவிட்டார்.
இந் நிலையில் சின்னனனை சஸ்பெண்ட் செய்து போலீஸ் கமிஷனர் உத்தரவிட்டுள்ளார்.
போலீசாருக்கு திருடர்கள் கத்திக்குத்து:
இந் நிலையி்ல் நெல்லை மாவட்டம் சிவந்திப்பட்டியைச் சேர்ந்த கண்ணன் மனைவி ராஜேஸ்வரி சாலையில் தனியாக சென்று கொண்டிருந்தார்.
அப்போது அந்த வழியில் பைக்கில் வந்த 2 பேர் ராஜேஸ்வரியிடம் இருந்து நகையை பறிக்க முற்பட்டனர்.
அப்போது அந்த இடத்துக்கு வந்த ஞானவேல், செல்வராஜ் ஆகிய 2 போலீசாரும் திருடர்களை பிடிக்க முயன்றனர். அப்போது திருடர்க் ஞானவேலை கத்தியால் குத்தினார்.
செல்வராஜை இரும்புக் கம்பியால் தாக்கிவிட்டு தப்பிவிட்டனர்.
காயமடைந்த 2 பேரும் நெல்லை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.












Click it and Unblock the Notifications