உணவில் விஷம் வைத்து கொல்ல சதி என நளினி புகார்-விசாரிக்க குழு அமைப்பு

ராஜிவ் காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனைக் கைதியாக வேலூர் பெண்கள் சிறையில் அடைக்கப்பட்டுள்ள நளினி இதுதொடர்பாக சிறைத்துறை கூடுதல் டிஜிபி ஷியாம் சுந்தருக்கு கடிதம் எழுதியுள்ளார். அதில்,
கடந்த புதன்கிழமை (21-4-2010) யில் இருந்து புது குற்றவாளி தொகுதியில் இருந்த எல்லா விசாரணை கைதிகளையும் பழைய குற்றவாளி தொகுதிக்கு மாற்றிவிட்டனர்.
தற்போது புது குற்றவாளி தொகுதிகள் 2, 3, 4, 5, 7, 8 ஆகியவற்றில் 200 பேர் அடைக்கக்கூடிய இடம் காலியாக உள்ளது. இதில் 6-வது தொகுதியில் நான் மட்டுமே இருக்கிறேன்.
எனக்கு ஏ' வகுப்பு இருப்பதால் ஒரு உதவியாளர் உண்டு. எனக்கு அது மறுக்கப்பட்டு உள்ளது. ஆனால், புது குற்றவாளி தொகுதியை கடந்த 21-4-2010 முதல் பெருக்கவோ, சுத்தம் செய்யவோ யாரையும் அனுமதிப்பதில்லை. அந்த தொகுதிக்கான வார்டர் முதல் தளத்துக்கு வரவோ, அங்குள்ள வேலைகளை செய்யவோ தடை செய்யப்பட்டு உள்ளது.
இது தவிர காலை-மாலை என்று என்னுடனே சமையல் அறையிலும், தொகுதியிலும் பணியில் இருக்கும் பெண் காவலர்கள் என் உணவில் மருந்து கலக்க ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. என் உணவை காப்பாற்ற நான் கடும் முயற்சி செய்தும் பலன் ஒன்றும் இல்லை. இரவில் கே.சி.லட்சுமி என்ற உதவி ஜெயிலர் 27-4-2010 இரவு வருகிறார். இவர்களாக எதை வேண்டுமானாலும் கொண்டு வந்து என் தொகுதியில் போட்டு விட்டு என்னை சோதனை செய்து எடுத்ததாக சொல்ல நிறைய வாய்ப்புகள் உண்டு என்று கூறியுள்ளார் நளினி.
விசாரணைக் குழு அமைப்பு :
நளினியின் புகாரைத் தொடர்ந்து விசாரணைக்கு தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. டிஐஜி தலைமையிலான குழு விசாரணை நடத்தி 2 நாளில் அறிக்கை தாக்கல் செய்யும் என அரசு அறிவித்துள்ளது.
நளினியின் புகார்கள் குறித்து காங்கிரஸ் உறுப்பினர் ஞானசேகரன் இன்று சட்டசபையில் கேள்வி எழுப்பினார். அதற்குப் பதிலளித்த சட்டத்துறை அமைச்சர் துரைமுருகன், வேலூர் சிறையில் அடைக்கப்பட்டுள்ள நளினி சில புகார்களை எழுப்பியுள்ளார்.
இதுகுறித்து கோவை சிறைத்துறை டிஐஜி கோவிந்தரான் தலைமையிலான குழு விசாரணை நடத்தி அரசிடம் அறிக்கை தாக்கல் செய்யும். இந்தக் குழுவில் பெண் சிறை அதிகாரி ஒருவரும் இடம் பெறுவார் என்று தெரிவித்தார்.
கடந்த மாதமும் தான் சிறையில் சித்திரவதை செய்யப்படுவதாக நளினி புகார் கூறியிருந்தார். அவரது அறையிலிருந்து செல்போன, சிம் கார்டு பறிமுதல் செய்யப்பட்டதாக சிறைத்துறையினர் தெரிவித்தனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
-
விவாகரத்து முடியாமல் 'டூயட்' பாடினால் 10 ஆண்டு சிறை? - விஜய்க்கு சிக்கலாகும் பிரிவு 69.. மாட்டுனாரு -
Sani Peyarchi: சனிப்பெயர்ச்சி மேஷம் முதல் மீனம் வரை.. 12 ராசிகளும் பெறப்போகும் பலன்கள்.. முழு விவரம் -
அமெரிக்காவை கைவிடும்.. சவுதி அரேபியா, குவைத், யு.ஏ.இ, கத்தார்.. அமெரிக்க சாம்ராஜ்யத்தின் அஸ்தமனம்? -
ஒவ்வொன்றும் ஒரு வெடி குண்டுக்கு சமம்.. சங்கீதா கையில் அந்த வீடியோ ஆதாரம்.. வசமாக சிக்கும் விஜய்! -
பல்லாவரம் ஜிஎஸ்டி சாலை ஸ்தம்பித்தது.. என்ன காரணம்.. தாம்பரம் போலீசாருக்கு பறந்த கோரிக்கை -
ஈரானை தாக்க.. இந்திய துறைமுகத்தை பயன்படுத்தியதா அமெரிக்கா? மத்திய அரசு மறுப்பு -
தாம்பரத்தில் இருந்து வேளச்சேரி மயிலாப்பூர் வழியாக கடற்கரைக்கு ரயில்கள்.. ரயில்வேக்கு பறந்த கோரிக்கை -
பர்மிஷன் கொடுக்க டிரம்ப் யாரு? இந்தியாவின் இறையாண்மை அமெரிக்காவின் கையில் அடகு? ஷாக் சம்பவம் -
பெங்களூரில் மருமகளை சமையல் செய்ய வேண்டாம் என்ற மாமியார்.. அதுக்கு இப்படியா செய்வாங்க -
பீகார் முதல்வர் நிதிஷ் குமார் ராஜினாமா! சிறுவயது ஆசைக்காக ராஜ்யசபா எம்பியாகிறார்.. அவரே தந்த விளக்கம் -
"இந்தியாவின் எதிரி".. அஜர்பைஜானை குறிவைத்து அடித்த ஈரான்.. தீப்பற்றி எரியும் நாடு - அதிரடி -
அது விக்கெட் இல்லமா.. வான்கடே மைதானத்தில் துள்ளிக் குதித்த சாக்ஷி.. அமைதிபடுத்தி கிண்டல் செய்த தோனி












Click it and Unblock the Notifications