Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

உணவில் விஷம் வைத்து கொல்ல சதி என நளினி புகார்-விசாரிக்க குழு அமைப்பு

Subscribe to Oneindia Tamil

Nalini
சென்னை: எனது உயிருக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளது. எனக்குக் கொடுக்கப்படும் உணவில் மருந்தைக் கலந்து கொல்ல முயற்சி நடக்கிறது என்று நளினி புகார் கூறியதைத் தொடர்ந்து அதுகுறித்து விசாரிக்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

ராஜிவ் காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனைக் கைதியாக வேலூர் பெண்கள் சிறையில் அடைக்கப்பட்டுள்ள நளினி இதுதொடர்பாக சிறைத்துறை கூடுதல் டிஜிபி ஷியாம் சுந்தருக்கு கடிதம் எழுதியுள்ளார். அதில்,

கடந்த புதன்கிழமை (21-4-2010) யில் இருந்து புது குற்றவாளி தொகுதியில் இருந்த எல்லா விசாரணை கைதிகளையும் பழைய குற்றவாளி தொகுதிக்கு மாற்றிவிட்டனர்.

தற்போது புது குற்றவாளி தொகுதிகள் 2, 3, 4, 5, 7, 8 ஆகியவற்றில் 200 பேர் அடைக்கக்கூடிய இடம் காலியாக உள்ளது. இதில் 6-வது தொகுதியில் நான் மட்டுமே இருக்கிறேன்.

எனக்கு ஏ' வகுப்பு இருப்பதால் ஒரு உதவியாளர் உண்டு. எனக்கு அது மறுக்கப்பட்டு உள்ளது. ஆனால், புது குற்றவாளி தொகுதியை கடந்த 21-4-2010 முதல் பெருக்கவோ, சுத்தம் செய்யவோ யாரையும் அனுமதிப்பதில்லை. அந்த தொகுதிக்கான வார்டர் முதல் தளத்துக்கு வரவோ, அங்குள்ள வேலைகளை செய்யவோ தடை செய்யப்பட்டு உள்ளது.

இது தவிர காலை-மாலை என்று என்னுடனே சமையல் அறையிலும், தொகுதியிலும் பணியில் இருக்கும் பெண் காவலர்கள் என் உணவில் மருந்து கலக்க ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. என் உணவை காப்பாற்ற நான் கடும் முயற்சி செய்தும் பலன் ஒன்றும் இல்லை. இரவில் கே.சி.லட்சுமி என்ற உதவி ஜெயிலர் 27-4-2010 இரவு வருகிறார். இவர்களாக எதை வேண்டுமானாலும் கொண்டு வந்து என் தொகுதியில் போட்டு விட்டு என்னை சோதனை செய்து எடுத்ததாக சொல்ல நிறைய வாய்ப்புகள் உண்டு என்று கூறியுள்ளார் நளினி.

விசாரணைக் குழு அமைப்பு :

நளினியின் புகாரைத் தொடர்ந்து விசாரணைக்கு தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. டிஐஜி தலைமையிலான குழு விசாரணை நடத்தி 2 நாளில் அறிக்கை தாக்கல் செய்யும் என அரசு அறிவித்துள்ளது.

நளினியின் புகார்கள் குறித்து காங்கிரஸ் உறுப்பினர் ஞானசேகரன் இன்று சட்டசபையில் கேள்வி எழுப்பினார். அதற்குப் பதிலளித்த சட்டத்துறை அமைச்சர் துரைமுருகன், வேலூர் சிறையில் அடைக்கப்பட்டுள்ள நளினி சில புகார்களை எழுப்பியுள்ளார்.

இதுகுறித்து கோவை சிறைத்துறை டிஐஜி கோவிந்தரான் தலைமையிலான குழு விசாரணை நடத்தி அரசிடம் அறிக்கை தாக்கல் செய்யும். இந்தக் குழுவில் பெண் சிறை அதிகாரி ஒருவரும் இடம் பெறுவார் என்று தெரிவித்தார்.

கடந்த மாதமும் தான் சிறையில் சித்திரவதை செய்யப்படுவதாக நளினி புகார் கூறியிருந்தார். அவரது அறையிலிருந்து செல்போன, சிம் கார்டு பறிமுதல் செய்யப்பட்டதாக சிறைத்துறையினர் தெரிவித்தனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+