2 நாட்களாக பலி, விபத்து, காயம் என அவதிப்படும் காவல்துறை

Subscribe to Oneindia Tamil

நெல்லை: தமிழகத்தில் கடந்த இரு நாட்களாக காவல்துறையினர் தொடர் தாக்குதலுக்குள்ளாகி வருகின்றனர்.

தமிழகத்தில் நேற்று ஒரே நாளில் காவல்துறையில் சிலர் பலியாகியும், காயமடைந்தும், கைது செய்யப்பட்டும் உள்ளது காவல்துறையினரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசத்தில் உள்ள வங்கி ஏடிஎம் மையத்தில் பொதுமக்களுக்கும், செக்யூரிட்டிக்கும் நடந்த வாக்குவாதத்தில் செக்யூரிட்டியால் சப்-இன்ஸ்பெக்டர் பன்னிர்செல்வம் சுட்டு கொல்லப்பட்டார்.

மதுரையில், ஜெய்ஹிந்த்புரத்தில் இன்ஸ்பெக்டரின் போலி கையெழுத்து போட்ட ஏட்டு சின்னாள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு அவர் தலைமறைவானார்.

திருநெல்வேலி சிவந்திப்பட்டியில் கொள்ளையர்களை விரட்டி சென்ற போலீஸ் ஏட்டுகள் செல்வராஜ், ஞானவேல் கொள்ளையர்களின் தாக்குதலில் வெட்டப்பட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

தென்காசி அருகே அச்சன்புதூர் காவல் நிலையத்தில் பணிபுரியும் ஏட்டு ஐயப்பன் மீது ஆட்டோ மோதி படுகாயம் அடைந்தார். குற்றாலம் காவல் நிலையத்தில் ஏட்டு ஒருவர் உடல் நலக்குறைவால் பலியானார்.

கரூர் மாவட்டம் தோகமலை சப்-இன்ஸ்பெக்டர் சக்திவேல் என்பவர் லஞ்சம் வாங்கியபோது கையும் களவுமாக பிடிப்பட்டார்.

இப்படி அடுத்தடுத்து 2 நாட்களில் காவல்துறையினருக்கு அடுத்தடுத்து சோதனைகள் வந்திருப்பதால் காவல்துறையினர் மத்தியில்அதிர்ச்சி காணப்படுகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+