கேத்தன் தேசாய் ஊழல் எதிரொலி –இந்திய மருத்துவக் கவுன்சிலைக் கலைக்க மத்திய அரசு முடிவு
Subscribe to Oneindia Tamil
டெல்லி: இந்திய மருத்துவக் கவுன்சில் தலைவர் கேத்தன் தேசாய் கோடிக்கணக்கில் லஞ்சம் வாங்கி சிக்கியதைத் தொடர்ந்து மருத்துவக் கவுன்சிலைக் கலைக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இதற்கான ஒப்புதலை அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
இதுதொடர்பாக நேற்று கூடிய. அமைச்சரவைக் கூட்டத்தில், மருத்துவக் கவுன்சில் கலைப்பு தொடர்பான ஒப்புதலை அமைச்சரவை அளித்தது.
மேலும், இந்திய மருத்துவக் கவுன்சிலுக்குப் பதிலாக, பிரபலமான 7 டாக்டர்களைக் கொண்ட குழுவை அமைக்கவும் மத்திய அமைச்சரவை தீர்மானித்துள்ளது. கவுன்சிலின் பணிகளை இந்தக் குழுவே இனி கவனிக்கும்.
ஏப்ரல் 22ம் தேதி பஞ்சாப் மருத்துவக் கல்லூரி ஒன்றுக்கு உரிமம் வழங்க பல கோடி பணம் வாங்கியபோது கையும்களவுமாக சிபிஐயால் கைது செய்யப்பட்டார் தேசாய்.












Click it and Unblock the Notifications