கட்டபொம்மன் விழாவில் கலாட்டா - டிஎஸ்பிக்கு கத்தி குத்து !

Subscribe to Oneindia Tamil

தூத்துக்குடி: தூத்துக்குடி அருகே நடைபெற்ற கட்டபொம்மன் விழாவில் கலவரம் ஏற்பட்டது. மர்ம நபர்கள் போலீஸ் டிஎஸ்பி -யை கத்தியால் குத்திவிட்டு தப்பிவிட்டனர்.

தூத்துக்குடி மாவட்டம், பாஞ்சாலங்குறிச்சியில் கட்டபொம்மன் கோட்டை உள்ளது. இங்கு கட்டபொம்மன் குல தெய்வமான வீரசக்க தேவி ஆலய 54 வது வழிபாட்டு விழா, கட்டபொம்மன் விழா ஆகியன நேற்றும், இன்றும் நடைபெறுகிறது.

இதனைமுன்னிட்டு, கீழவேலாயுதபுரம் கிராமத்தில் இருந்து கட்டபொம்மன் நினைவு ஜோதி கொண்டு செல்லப்பட்டது.

அப்போது சென்ற வாகனங்கள் மீது மர்ம நபர்கள் கற்களை வீசி தாக்கினர்.
இதில் பல வாகனங்கள் பலத்த சேதமடைந்தன.

இதனால், ஆத்திரமடைந்த ஜோதி கொண்டு சென்றவர்கள், மதுரை - தூத்துக்குடி சாலையில் திடீர் மறியல் செய்தனர். மேலும் கற்களை வீசியதில் அந்த வழியாக வந்த ஒரு பஸ் கண்ணாடி உடைந்தது.

விளாத்திகுளம் டி.எஸ்.பி. லயேலா இக்னேஷியஸ் ஜீப் கல்வீசி தாக்கப்பட்டது.

அப்போது, ஏ.டி.எஸ்.பி.மார்ஸ்டன் லியோ, மற்றும் ஏட்டுக்கள் படு காயமடைந்தனர். மேலும், டிஎஸ்பி லயேலா இக்னேஷியஸ்- ஐ மர்ம நபர்கள் கத்தியால் குத்தியதில் படுகாயம் அடைந்தார்.

இதையடுத்து, போலீசார் கண்ணீர்புகை குண்டு வீசி, தடியடி நடத்தி நிலைமையை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.

இந்த நிலையில், கட்டபொம்மன் கோட்டையில் நடந்த அரசு விழாவில் தூத்துக்குடி கலெக்டர் கோ. பிரகாஷ், திமுக, எம்.பி. ஜெயதுரை, கட்டபொம்மன் வாரிசுகள் உள்பட பலர் பங்கேற்றனர்.

இந்த சம்பவம் காரணமாக தூத்துக்குடி மாவட்டம் முவுவதும் பதட்டம் நிலவுவதால் துப்பாக்கி ஏந்திய போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+