For Quick Alerts
For Daily Alerts
Just In
மறைந்த பைரான் சிங் ஷெகாவத்தின் உடல் நாளை தகனம்
ஜெய்ப்பூர்: மறைந்த முன்னாள் துணைக் குடியரசுத் தலைவர் பைரான் சிங் ஷெகாவத்தின் உடல் தகனம் நாளை ஜெய்ப்பூரில் நடைபெறும் என அவரது குடும்பத்தினர் அறிவித்துள்ளனர்.
அவருடைய உடல்தற்போது ஜெய்ப்பூர் சிவில் லைன்ஸ் பகுதியில் உள்ள அவரது வீட்டில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது.
ஆயிரக்ணக்கானோர் ஷெகாவத் உடலுக்கு அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
நாளை ஜெய்ப்பூர் வித்யாதர் நகர் பகுதியில் உள்ள ஒரு இடத்தில் இறுதிச் சடங்குள் நடைபெறும். அங்கேயே உடல் தகனமும் நடைபெறும். முன்னதாக சந்த்பால் மயானத்தில் உடல் தகனம் செய்யப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. தற்போது அதை மாற்றியுள்ளனர்.
நாளை காலை 10 மணிக்கு இறுதி ஊர்வலம் புறப்படும். உடல் தகனம் நடக்கும் இடம் 15 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது. வழியெங்கும் ஆயிரக்கணக்கானோர் கூடி இறுதி அஞ்சலி செலுத்தவுள்ளனர்.
Comments
Story first published: Sunday, May 16, 2010, 16:01 [IST]