Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

புதிய சட்டசபை கட்டடம், சென்டிரல் ரயில் நிலையத்திற்கு மனித வெடிகுண்டு மிரட்டல்

Subscribe to Oneindia Tamil

Assembly
சென்னை: சென்னையில் உள்ள தமிழக அரசின் புதிய சட்டசபை வளாகம், சென்டிரல் ரயில் நிலையம் ஆகியவற்றை மனித வெடிகுண்டு மூலம் தகர்க்கப் போவதாக மிரட்டல் வந்துள்ளது.

சென்னை காவல்துறை கட்டுப்பாட்டு அலுவலகத்திற்கு சனிக்கிழமை இரவு 9.30 மணி அளவில் ஒரு நபர் போனில் பேசியுள்ளார். அதில், சென்னை சென்டிரல் ரெயில் நிலையத்தையும், புதிய சட்டசபை வளாகத்தையும், மனித வெடிகுண்டு மூலம் தாக்கப்போகிறோம். அது முடியாவிட்டால், வான்வெளி தாக்குதல் நடத்துவோம் என்று கூறியுள்ளார்.

இதுகுறித்து உயர் அதிகாரிகளுக்குத் தகவல் பறந்தது. மறுபக்கம், போனில் பேசிய நபரைக் கண்டறியும் முயற்சிகள் முடுக்கி விடப்பட்டன. இன்னொரு பக்கம் மிரட்டல் விடுக்கப்பட்ட இரு இடங்களிலும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது. மோப்ப நாய்கள் உதவியுடன் வெடிகுண்டு நிபுணர்கள் தீவிர சோதனையில் இறங்கினர்.

இந்த தொலைபேசி மிரட்டல் புரளியாக இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. சம்பந்தப்பட்ட நபர் பேசிய தொலைபேசி அழைப்பு ஸ்பெயின் நாட்டிலிருந்து வந்துள்ளது.

புரளியாக இருக்கலாம் என கருதினாலும், இதை சாதாரணமாக எடுத்துக் கொள்ளாமல் போலீஸார் தீவிர விசாரணையில் இறங்கியுள்ளனர்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+