2 நாளில் 9,000 எம்.பி.பி.எஸ். விண்ணப்பங்கள் விற்பனை

Subscribe to Oneindia Tamil

Stethoscope
சென்னை: தமிழகத்தில் இரு நாட்களில் 9,000 எம்.பி.பி.எஸ். விண்ணப்பங்கள் விற்பனையாகியுள்ளன.

தமிழ்நாட்டில் உள்ள 17 அரசு மருத்துவ கல்லூரிகளில் 1,653 எம்.பி.பி.எஸ். சீட்டுகள் உள்ளன.

4 தனியார் மருத்துவ கல்லூரிகளில் 251 இடங்கள் அரசு ஒதுக்கீட்டின் கீழ் வரும். இந்த ஆண்டு தாகூர் மருத்துவ கல்லூரி, முத்துக்குமரன் மருத்துவ கல்லூரி ஆகிய 2 தனியார் கல்லூரிகள் தொடங்கப்படுகின்றன.

இந் நிலையில் எம்.பி.பி.எஸ். சேர்க்கைக்கான விண்ணப்பங்கள் கடந்த 17ம் தேதி முதல் விற்கப்பட்டு வருகின்றன. வரும் 31ம் தேதி வரை அனைத்து அரசு மருத்துவ கல்லூரிகளிலும் விண்ணப்பங்கள்ப் பெறலாம்.

கடந்த 2 நாட்களில் மட்டும் 9,000 விண்ணப்பங்கள் விற்பனையாகி உள்ளன. கடந்த ஆண்டை விட அதிகளவில் விண்ணப்பங்கள் விற்பனையாகியுள்ளதால், விண்ணப்பங்கள் தட்டுப்பாடு இல்லாமல் கிடைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இதற்காக கூடுதலாக விண்ணப்பங்கள் அச்சடிக்க மருத்துவக் தேர்வு கமிட்டி முடிவு செய்துள்ளது. ஏற்கனவே 20,000 விண்ணப்பங்கள் அச்சடிக்கப்பட்ட நிலையில் தற்போது கூடுதலாக 5,000 விண்ணப்பங்கள் அச்சடிக்க அனுமதி பெறப்பட்டுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+