தமிழக கடலோரப் பகுதிகளுக்கு தீவிரவாத அச்சுறுத்தல் இல்லை - கூடுதல் டிஜிபி
தூத்துக்குடி: தமிழக கடலோரப் பகுதிகளில் தீவிரவாத அச்சுறுத்தல் எதுவும் இல்லை என்று கடலோரப் பாதுகாப்பு குழும கூடுதல் டிஜிபி லாலாம் சங்கா கூறியுள்ளார்.
தூத்துக்குடியில் செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், நான் ஏடிஜிபியாக பதவியேற்றது முதல் ஒவ்வொரு கடலோர காவல் நிலையங்களிலும் ஆய்வு நடத்தி வருகிறேன். தமிழக கடலோர பகுதிகள் வழியாக தீவிரவாதிகள் ஊடுருவல் எதுவும் இல்லை.
இருப்பினும் ராமநாதபுரம் மாவட்ட கடலோர பகுதிகள் பதற்றம் மிகுந்தவையாக கருதப்பட்டு அங்கு கடத்தல், அன்னியர்கள் ஊடுருவலை தடுக்க கூடுதல் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
தருவைகுளம் காவல் நிலையத்தில் கடந்த ஆண்டு முதல் பழுதான நிலையில் உள்ள ரிப்-இன்புளோட் டபுள் படகு விரைவில் பழுது பார்க்கப்பட்டு ரோந்து பணிக்கு பயன்படுததப்படும்.
தமிழகம் முழுவதும் உள்ள கடற்கரை பகுதிகளில் மேலும் 30 கடலோர காவல் நிலையங்கள் அமைக்கப்படும். மேலும் ரோந்து பணிக்காக மேலும் பல படகுகள் வாங்கப்பட உள்ளது. தமிழக கடலோர பகுதிகளில் குறிப்பிட்டு சொல்லும்படியாக தீவிரவாத அச்சுறுத்தல்கள் எதுவும் இல்லை. இருந்தாலும் கடலோர காவல் படை போலீசார் முழு அளவில் உஷார் நிலையிலேயே உள்ளனர் என்றார்.












Click it and Unblock the Notifications