புயலில் மாயமான 6 நாகை மாவட்ட மீனவர்கள் மீட்பு
Subscribe to Oneindia Tamil
நாகப்பட்டனம்: லைலா புயலில் சிக்கி மாயமான நாகை மாவட்ட மீனவர்கள் 6 பேர் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளனர்.
நாகை மாவட்டம் திருமுல்லைவாசலைச் சேர்ந்த ஆறு மீனவர்கள் கடந்த 18ம்தேதி மீன் பிடிக்கச் சென்றனர். ஆனால் திடீரென லைலா புயல் வந்து விட்டதால் அவர்கள் கரை திரும்பவில்லை.
இதையடுத்து அவர்களது குடும்பத்தினரும், உறவினர்களும் அதிர்ச்சி அடைந்து கவலையில் மூழ்கினர்.
அவர்களைத் தேடும் முயற்சிகள் முடுக்கி விடப்பட்டன. இந்தநிலையில் காணாமல் போன 6 மீனவர்களும் பூம்புகார் பகுதியில் கரை ஒதுங்கியிருப்பது தெரிய வந்துள்ளது. இதையடுத்து ஆறு பேரும் இன்று திருமுல்லைவாசல் திரும்புகின்றனர்.












Click it and Unblock the Notifications