காற்றாலை மூலம் மின் உற்பத்தி அதிகரிப்பு-மி்ன்தடை 1 மணி நேரமாக குறைப்பு

தமிழகத்தில் அனல்மின் நிலையம், நீர் மின் நிலையம், காற்றாலை போன்றவற்றின் மூலம் மின் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது. தமிழகத்தில் மின் தேவை என்பது நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அதுவும் தற்போது கோடை காலம் என்பதால் மின்தேவை வழக்கத்தை விட அதிகமாக இருக்கிறது.
ஏசி பயன்பாடும் அதிகரித்துள்ளதால் மின் தேவையை பூர்த்தி செய்வதில் சிரமம் ஏற்பட்டு வந்தது. அதோடு நீர்மின் நிலையங்கள் மற்றும் காற்றாலை மூலம் மின் உற்பத்தி கணிசமாக குறைந்தது. இதனால் தமிழகம் முழுவதும் சென்னை நீங்கலாக மற்ற மாவட்டங்களில் 1 நாளைக்கு மூன்று மணி நேரம் மின்தடையை கடந்த மூன்று மாதங்களுக்கும் மேலாக அரசு செயல்படுத்தி வருகிறது. இரண்டு மாதமாக வெயிலின் உக்கிரம் அதிகமாக இருக்கும் நிலையில் மின்தடை அதிகமாக இருந்ததால் மக்கள் கடும் பாதிப்புக்கு உள்ளாகி வந்தனர்.
இந்நிலையில் தமிழகத்தில் தற்போது காற்றாலை மூலம் மின்உற்பத்தி அதிகரித்த வண்ணம் இருக்கிறது. இதனால் மின்வாரிய அதிகாரிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். தமிழகத்தில் அக்னி வெயில் இன்னும் நான்கு நாளில் முடியப் போகிற நிலையில் மாநிலம் முழுவதும் பரவலாக நல்ல காற்று வீசதுவங்கியுள்ளது.
காற்று அதிகமாக வீச துவங்கியிருப்பதால் காற்றாலை மூலம் மின் உற்பத்தி அதிகரிக்க தொடங்கியுள்ளது. அதுவும் நேற்று காற்றாலை மூலம் 1,800 மெகாவாட் மின் உற்பத்தி ஆனது. இதே நிலை தொடரும் வாய்ப்பு இருப்பதாக மி்ன்வாரிய வட்டாரங்கள் தெரிவித்தன.
இதனால் மின்தடை நேரம் 3 மணி நேரத்தில் இருந்து 1 மணி நேரமாக குறைக்கப்பட்டுள்ளது. சில இடங்களில் ஒரு மணி நேரம்தான் நேற்று மின்தடை இருந்ததாக மின்வாரிய வட்டாரங்கள் தெரிவித்தன. இதே நிலை தொடரும் என்றும் அந்த வட்டாரங்கள் தெரிவித்தன.
மத்திய அரசு மின் கட்டணம் உயர்கிறது:
இதற்கிடையே எரிவாயு விலை உயர்வு காரணமாக மத்திய அரசு வழங்கி வரும் மின்சாரத்துக்கான கட்டணம் யூனிட்டுக்கு ரூ.1 உயர்கிறது.
மத்திய அரசு நிறுவனங்களான ஓ.என்.ஜி.சி, ஆயில் இந்தியா ஆகியவை உற்பத்தி செய்யும் இயற்கை எரிவாயுவின் விலை 2 மடங்கு உயர்த்தப்பட்டுள்ளது. அதாவது 1,000 கியூபிக் மீட்டர் எரிவாயுவின் விலை ரூ.3,200ல் இருந்து ரூ.6,818 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.
மத்திய அரசின் பல மின் உற்பத்தி நிறுவனங்கள் இந்த எரிவாயுவை பயன்படுத்தி மின்சாரம் உற்பத்தி செய்கின்றன. எனவே, மத்திய அரசு வழங்கும் மின்சாரத்துக்கான கட்டணம் யூனிட்டுக்கு ரூ.1 வரை உயர்த்தப்படும் என்று மத்திய மின்துறை அமைச்சர் சுஷில்குமார் ஷின்டே கூறியுள்ளார்.
அதே போல இந்த மின் கட்டண உயர்வால் உர உற்பத்தி நிறுவனங்களின் செலவும் அதிகரிக்கும் என்பதால், உரங்களின் விலையும் அதிகரிக்கலாம் என்று தெரிகிறது.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன?












Click it and Unblock the Notifications