கோதுமை ஏற்றுமதி மீதான தடையை நீக்க மத்திய அரசு திட்டம்
Subscribe to Oneindia Tamil
டெல்லி:

கோதுமை உற்பத்தியில் இந்தியா இரண்டாவது இடத்தில் உள்ளது. 2008-09ம் ஆண்டு நாட்டின் கோதுமை உற்பத்தி 8.06 கோடி டன்னாக இருந்தது. இந்த ஆண்டு இது 8.09 கோடி டன்னாக உயரும் என்று தெரிகிறது.
கோதுமையின் விலை உயர்ந்ததையடுத்து கடந்த 2007ம் ஆண்டு இதன் ஏற்றுமதிக்கு மத்திய அரசு தடை விதித்தது. மேலும் கையிருப்பை நிலைநிறுத்த கோதுமையை இறக்குமதி செய்ய வேண்டிய நிலையும்ம் உருவானது.
ஆனாலும் ஆப்பிரிக்க நாடுகளுக்கும், வங்க தேசத்துக்கும் கோதுமை ஏற்றுமதி செய்ய அனுமதி அளிக்கப்பட்டிருந்தது.
இப்போது உற்பத்தி அதிகரித்து, இருப்பும் அதிகரித்துள்ளதால் பிற நாடுகளுக்கும் கோதுமை ஏற்றுமதி செய்யும் வகையில் தடை முழுமையாக நீக்கப்படும் என்று தெரிகிறது.












Click it and Unblock the Notifications