மங்களூர் விமான விபத்து- கருணாநிதி, ஜெ., பர்னாலா இரங்கல்
சென்னை: மங்களூரில் நடந்த ஏர்இந்தியா விமான விபத்தில் 158 பேர் கொல்லப்பட்ட சம்பவம் குறித்து ஆளுநர் பர்னாலா, முதல்வர் கருணாநிதி, அதிமுக பொது ச்செயலாளர் ஜெயலலிதா ஆகியோர் அதிர்ச்சியும், இரங்கலும் வெளியிட்டுள்ளனர்.
இதுகுறித்து் ஆளுநர் வெளியிட்டுள்ள அறிக்கையில், துபாய் மங்களூர் இடையே செல்லும் ஏர் இந்தியா விமானம், மங்களூரில் விபத்துக்கு உள்ளாகி பல உயிர்களை பலி கொண்ட சம்பவத்தைக் கேட்டு கடுமையான அதிர்ச்சியையும் வேதனையையும் அடைந்தேன்.
அந்த சம்பவத்தில் இறந்தவர்களின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலையும் அனுதாபத்தையும் கூறிக் கொள்கிறேன். காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய வேண்டுகிறேன் என்று கூறியுள்ளார்.
முதல்வர் கருணாநிதி வெளியிட்டுள்ள செய்தியில்,
துபாயிலிருந்து மங்களூர் வந்த ஏர் இந்தியா விமானம் தரையிறங்கும் போது விபத்துக்குள்ளானதில் சுமார் 158 பயணிகள் மற்றும் விமானப் பணியாளர்கள் உயிரிழந்த துயரச்செய்தியை அறிந்து நான் மிகுந்த வருத்தமும், அதிர்ச்சியும் அடைந்தேன். இந்த விபத்தில் உயிரிழந்த அனைவரின் குடும்பத்தினருக்கும் என்னுடைய ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபங்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
இதுபோன்ற விபத்து இனி நடைபெறாமல் இருக்க முன்னெச்சரிக்கை தேவை. விபத்துக்கு வருத்தம் தெரிவித்து பிரதமர் மன்மோகன்சிங், காங்கிரஸ் தலைவர் சோனியாகாந்தி ஆகியோருக்கும் கடிதம் எழுதியுள்ளேன் என்று தெரிவித்துள்ளார்.
அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா வெளியிட்ட இரங்கல் செய்தியில்,
மங்களூர் விமான நிலையத்தில் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் விபத்துக்குள்ளாகி 158 பேர் பலியான செய்தி அறிந்து மிகுந்த அதிர்ச்சி அடைந்தேன். இந்த விபத்தில் இறந்தவர்களின் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன். காயம் அடைந்தவர்கள் குணமடைய பிரார்த்தனை செய்கிறேன் என்று கூறியுள்ளார்.
-
இந்தோனேஷிய கடலில் அது பாட்டுக்கு போகுது.. உலகமே வியப்பில் உறைந்திருச்சு! விலகிய 40 கோடி வருஷ மர்மம் -
விலகினார் திருமாவளவன்.. சட்டசபை தேர்தலில் போட்டியில்லை என அறிவிப்பு.. பின்வாங்கியது ஏன்? விளக்கம் -
ஈரான் போரை வைத்து பணம் பார்க்கும் டிரம்ப் வாரிசுகள்.. நடுவில் சிக்கிக்கொண்ட அரபு நாடுகள்! -
சிங்காநல்லூர் காங்கிரஸ் வேட்பாளர் ஶ்ரீநிதி அண்ணாமலை ஆதரவாளராமே.. போராட்டத்தில் குதித்த கதர்கள் -
அமெரிக்க கோட்டையில் ஓட்டை! ஈரானின் 'துல்லிய' ட்ரோன் தாக்குதல்: சிதறிய சி.ஐ.ஏ ரகசியங்கள்! -
Sundar C: ஏங்க கனிமொழி மட்டும் தூத்துக்குடிக்காரங்களா? நானும் மதுரைக்காரன்தான்! சுந்தர் சி விமர்சனம் -
தமிழ் புத்தாண்டு பலன்: விருச்சிக ராசிக்கு 9 இல் குரு.. தொட்டதெல்லாம் தங்கமாகப் போகுது -
குஷ்புவிடம் 3.5 கிலோ தங்கம், 24.3 கிலோ வெள்ளி இருக்கு.. சுந்தர்.சி சொத்து மதிப்பு எவ்வளவு? -
டாக்டர் படிப்பை முடித்த அனிதா சம்பத்.. உருக்கமாக சொன்ன தகவல்! கடைசியில் இப்படி ஆகிடுச்சே! -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் உச்சவரம்பு நீக்கம்.. ரிசர்வ் வங்கி மக்களுக்கு ஜாக்பாட்.. சாதக, பாதகம் என்ன -
“திருச்சுழியில் போட்டியிட விருப்பமனுவே தராத என்னை அனுப்பிட்டாங்க” அதிமுக வேட்பாளர் ராஜவர்மன் குமுறல் -
Heavy Rain: கனமழை பிச்சு உதறும்.. கோவை, நீலகிரி, தேனியில் இடி, மின்னலுடன் வெளுத்து வாங்கும்.. வானிலை எச்சரிக்கை












Click it and Unblock the Notifications