விழுப்புரம் அருகே சாலை விபத்தில் 3 பேர் பலி
Subscribe to Oneindia Tamil

நெல்லை மாவட்டம் செங்கோட்டையிலிருந்து ஒரு பேருந்து சென்னை நோக்கி வந்து கொண்டிருந்தது. அந்தப் பேருந்து பிடாகம் என்ற இடத்தில் வந்தபோது நேற்று இரவு பழுதடைந்தது. இதையடுத்து சாலையோரம் பஸ்சை நிறுத்தி வைத்து பழுது பார்த்துக் கொண்டிருந்தனர்.
அந்த சமயத்தில் ஒரு சரக்கு லாரி சென்னையிலிருந்து வந்தது. இந்த லாரி, சாலையோரம் நின்றிருந்த பஸ் நிற்பது தெரியாமல் அதன் பின்னாலிருந்து பலமாக மோதியது.
இந்தக் கோர விபத்தில் ஒரு பெண் உள்பட 3 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். விபத்தால் அந்த சாலையில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.












Click it and Unblock the Notifications