Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

பொது இடத்தில் ரகளை-முன்னாள் கவுன்சிலரை மிரட்டிய வக்கீல் கைது

Subscribe to Oneindia Tamil

சுரண்டை: நெல்லை மாவட்டம் சுரண்டை அருகே முன்னாள் பஞ்சாயத்து உறுப்பினரை அரிவாளைக் காட்டி மிரட்டிய வக்கீலை போலீஸார் கைது செய்தனர்.

சுரண்டை அருகே உள்ள ராஜபாண்டி வடக்கு தெருவை சேர்ந்தவர் சண்முகையா மகன் செந்தில்குமார். இவர் தென்காசி குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் வக்கீலாக உள்ளார். இவரது பக்கத்து வீட்டை சேர்ந்தவர் வெள்ளியப்பன் மகன் முருகன். இவர் ராஜபாண்டி பஞ்சாயத்து முன்னாள் உறுப்பினர். இவர்களுக்குள் முன்விரோதம் இருந்து வந்தது.

நேற்று வக்கீல் செந்தில்குமார் முருகனிடம் தகராறு செய்து அரிவாளை காட்டி கொலை மிரட்டல் விடுத்துள்ளார். பின்னர் வீரகேரளம் வந்த செந்தில்குமார் வடக்கு பஸ் நிலையத்தில் கையில் அரிவாளுடன் ரகளை செய்து பொதுமக்களை மிரட்டினாராம்.

இதையறிந்த விகேபுதூர் ஏட்டு தங்ராஜ், போலீஸ்காரர் ஸ்டீபன் ஆகியோர் அங்கு சென்றனர். அவர்களையும் வக்கீல் மிரட்டினாராம். அவரை கைது செய்த போலீசார் செங்கோட்டை கோர்ட்டில் ஆஜர்படுத்தி காவலில் வைத்தனர்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+