போதையில் ராணுவ அதிகாரியின் மனைவி-ஆட்டோ மீது கார் மோதி 3 பேர் பலி
டெல்லி: கடும் போதையில் ராணுவ அதிகாரியின் மனைவி காரை படுவேகத்தில் ஓட்டிச் சென்று ஆட்டோ மீது மோதினார். அதில் 2 பேர் பலியாயினர்.
டெல்லியில் பணிபுரியும் கலோனல் பதவியில் உள்ள ராணுவ அதிகாரி ராகுல் சிங்கின் மனைவி நிவேதிதா சிங் (32), சனி்க்கிழமை இரவு பப் ஒன்றில் முழு போதையை ஏற்றிக் கொண்டு தனது ஹோண்டா சிட்டி காரில் டெல்லி கண்டோன்மென்ட் பகுதியில் உள்ள தனது வீட்டுக்கு வந்து கொண்டிருந்தார்.
கடும் போதையிலும் அவர் காரை மிக வேகமாக ஓட்டினார். தனது வீட்டருகே வந்த நிலையில் சர்ச் ரோட் என்ற இடத்தில் பெட்ரோல் பங்க் அருகே எதிரே வந்த ஆட்டோ மீது மோதினார். இதில் ஆட்டோ டிரைவர், பயணி உள்பட 2 பேர் அந்த இடத்திலேயே பலியாயினர். மேலும் இருவர் படுகாயமடைந்தனர்.
இதையடுத்து நிவேதிதா கைது செய்யப்பட்டுள்ளார். ஆனால், அவர் உடனே நீதிமன்றத்தில் ஜாமீன் பெற்று வெளியே வந்துவிட்டது குறிப்பிடத்தக்கது. அந்த அளவுக்கு நிவேதிதா மீது மிக சாதாரணமான வழக்குகளை கண்டோன்மென்ட் போலீசார் பதிவு செய்துள்ளனர்.












Click it and Unblock the Notifications