புனே குண்டுவெடிப்பு-துபாயிலிருந்து வந்த முக்கிய குற்றவாளி கைது
மங்களூர்: புனேயில் நடந்த குண்டுவெடிப்பு தொடர்பாக இந்தியன் முஜாகிதீன் அமைப்பைச் சேர்ந்த அப்துல் சமத் பட்கல் என்ற நபர் துபாயில் இருந்து வந்திறங்கியபோது மங்களூர் விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டார்.
துபாயில் இருந்து இன்று காலை மங்களூர் பாஜ்பே விமான நிலையம் வந்திறங்கிய விமானத்தில் வந்த பட்கலை, அங்கு காத்திருந்த மகாராஷ்டிர தீவிரவாதத் தடு்பபுப் போலீசார் கைது செய்து அழைத்துச் சென்றனர்.
புனேயில் ஜெர்மன் பேக்கரியில் நடந்த குண்டுவெடிப்பில் இவருக்கு தொடர்பு உள்ளது. வெடிகுண்டு கொண்ட பையை அவர் பேக்கரியில் வைத்துவிட்டு வெளியேறியது அங்கிருந்த சிசிடிவியில் பதிவாகியுள்ளது. இதையடுத்து தேடப்பட்டு வந்த பட்கல் தலைமறைவாக இருந்தார்.
இந் நிலையில் இன்று இவர் துபாயில் இருந்து விமானத்தில் வருவது குறித்து அறிந்து மும்பை தீவிரவாதத் தடுப்புப் போலீசார் மங்களூரில் காத்திருந்து கைது செய்தனர்.
அவரை உடனடியாக ரகசிய இடத்துக்குக் கொண்டு சென்றுவிட்டனர்.
நேற்று முன் தினம் விமான விபத்து நடந்த விமான நிலையம் அது என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications