ஆப்கானிஸ்தான்: கால்பந்து வீரர் பெக்காமுக்கு குறி வைத்த தலிபான்கள்!

அங்கிருந்து ஹெலிகாட்பர் மூலம் ஹெல்மன்ட் மாகாணத்தில் உள்ள கேப்டன் பாஸ்டன் முகாமுக்குச் சென்றார். அங்குள்ள உள்ள 286 இங்கிலாந்து வீரர்களின் நினைவிடத்தில் அவர் மரியாதை செலுத்தினார்.
அப்போது காந்தகாரில் உள்ள நேடோ படைகளின் மிகப் பெரிய விமானத் தளத்தின் மீது தலிபான்கள் மாபெரும் தாக்குதல் நடத்தினர். பெக்காம் அங்கு இருப்பதாக நினைத்து தலிபான்கள் தாக்குதல் நடத்தியதாக இங்கிலாந்து உளவுப் பிரிவினர் தெரிவித்துள்ளனர்.
மேலும் அதே நாளில் இங்கிலாந்து வெளியுறவுத்துறைச் செயலாளர் வில்லியம் ஹேக் மற்றும் பாதுகாப்புத்துறைச் செயலாளர் லியாம் பாக்ஸ் ஆகியோரும் ஆப்கானிஸ்தானில் ரகசிய பயணத்தில் இருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த மூவரின் வருகையையும் எப்படியோ தலிபான்கள் அறிந்துள்ளனர். அதனால் தான் அந்த தினத்தில் மாபெரும் தாக்குதலை விமானப் படைத் தளத்தின் மீது நடத்தியுள்ளனர்.
இதற்கிடையே நேடோ படை வீரர் ஒருவரைக் கொன்றால் ரூ.2 லட்சம் பரிசு வழங்கப்படும் என்று தலிபான் அமைப்பு அறிவித்துள்ளது.












Click it and Unblock the Notifications