ருச்சிகா பாலியல்-தற்கொலை வழக்கு: ரத்தோர் தண்டனை அதிகரிப்பு

Subscribe to Oneindia Tamil

Rathore and Ruchika
சண்டீகர்: ருச்சிகா பாலியல் பலாத்காரம், தற்கொலை வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட ஹரியாணா மாநில முன்னாள் காவல்துறை டிஜிபி ரத்தோரின் சிறை தண்டனை ஒன்றரை ஆண்டாக உயர்த்தப்பட்டுள்ளது.

1990ம் ஆண்டு ஆகஸட் மாதம் 1ம் தேதி டென்னிஸ் வீராங்கனையான ருச்சிகாவிடம் (14) பாலியல் முறைகேட்டில் ஈடுபட்டார் ரத்தோர் (68). இதையடுத்து 3 மாதங்கள் கழித்து ருச்சிகா தற்கொலை செய்து கொண்டார்.

20 ஆண்டுகளாக அப்படியே அடங்கிப் போய்விட்ட இந்த விவகாரம் 2 ஆண்டுகளுக்கு முன்னர் தான் வெளியில் வந்தது. ருச்சிகாவின் தோழி ஒருவர் இது குறித்து தகவல்களை வெளியிட்டதால் இந்த விவகாரம் வெளியுலகுக்குத் தெரியவந்தது.

இதையடுத்து ரத்தோர் மீது பாலியல் முறைகேடு மற்றும் தற்கொலைக்குத் தூண்டியதாக சிபிஐ வழக்கு பதிவு செய்து அவரைக் கைது செய்ததது.

இந்த வழக்கில் ரத்தோருக்கு சிபிஐ சிறப்பு நீதிமன்றம் 6 மாதம் சிறை தண்டனை வழங்கியது. ஆனால், அவர் ஜாமீனில் வெளியே வந்துவிட்டார்.

ரத்தோருக்கு வழங்கப்பட்ட தண்டனையை அதிகரிக்கக் கோரி ருச்சிகாவின் பெற்றோர் சண்டீகர் செசன்ஸ் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தனர். ஆனால், தனக்கு வழங்கப்பட்ட 6 மாத சிறை தண்டனையை ரத்து செய்யக் கோரி ரத்தோரும் இதே நீதிமன்றத்தில் மேல் முறையீட்டு மனு தாக்கல் செய்தார்.

இந்த இரு மனு்க்களையும் விசாரித்த நீதிபதி குல்பீர் சிங், ரத்தோரின் மனுவை தள்ளுபடி செய்தார்.

மேலும் அவருக்கு வழங்கப்பட்ட 6 மாத கால சிறை தண்டனையை ஒன்றரை ஆண்டுகளாக உயர்த்தி உத்தரவிட்டார். மேலும் ரத்தோரை உடனடியாக சிறையி்ல் அடைக்கவும் உத்தரவிட்டார்.

இதையடுத்து ரத்தோர் சண்டீகரில் உள்ள புராயில் சிறையில் அடைக்கப்பட்டார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+