கள்ளத் தொடர்பு விவகாரத்தில் அதிமுக பிரமுகர் படுகொலை
சென்னை: சென்னையில் கள்ளத் தொடர்பு விவகாரத்தில் அதிமுக பிரமுகர் படுகொலை செய்யப்பட்டார்.
கொளத்தூர் ஜி.கே.எம்.காலனி அவ்வை நகரைச் சேர்ந்த காமராஜ் (48), புரசைவாக்கம் பகுதி 62வது வட்ட அதிமுக துணைச் செயலாளராக இருந்து வந்தார்.
நேற்றிரவு கொளத்தூர் மெயின் ரோடு சந்திப்பில் தனது நண்பர்களுடன் பேசிக் கொண்டிருந்தார். அப்போது மோட்டார் சைக்கிள்களில் வந்த 10 பேர் கொண்ட கும்பல் காமராஜை சுற்றி வளைத்து பட்டா கத்திகளால் சரமாரியாக வெட்டிவிட்டு தப்பியது.
இதில் காமராஜ் ரத்த வெள்ளத்தில் சரிந்தார். சென்னை அரசு பொது மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட அவர் இன்று காலை உயிரிழந்தார்.
இது தொடர்பாக கொளத்தூர் போலீசார் நடத்திய விசாரணையில், காமராஜ் திருமணம் செய்யாமலேயே ஒரு பெண்ணுடன் குடும்பம் நடத்தி வந்தது தெரியவந்தது.
இந் நிலையில் அந்தப் பெண்ணைவிட்டுவிட்டு சமீபத்தில் கொளத்தூர் பகுதியைச் சேர்ந்த லில்லி என்ற பெண்ணுடன் சேர்ந்து வாழ்நது வந்துள்ளார்.
இதற்கு லில்லியின் 2 மகன்கள் எதிர்ப்பு தெரிவித்தும் காமராஜ் கண்டுகொள்ளாததால் அவர்களே தங்களது கூட்டாளிகளுடன் சேர்ந்து காமராஜை கொலை செய்தது தெரியவந்துள்ளது.
இச்சம்பவம் தொடர்பாக போலீசார் லில்லியின் 2 மகன்கள் உள்பட 6 பேரை பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.












Click it and Unblock the Notifications