நக்சல் தாக்குதலில் பலியான தமிழக வீரர் குடும்பத்துக்கு ரூ.5 லட்சம்- கருணாநிதி
Subscribe to Oneindia Tamil

தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:
திருநெல்வேலி மாவட்டம் பாளையங்கோட்டையைச் சேர்ந்த மத்திய ரிசர்வ் காவல் படையின் தலைமைக் காவலர் எம். சுப்பிரமணியன், சட்டீஸ்கர் மாநிலம் பீஜப்பூர் மாவட்டத்தில் 8.5.2010 அன்று நக்சலைட்டுகள் நடத்திய தாக்குதலில் வீர மரணம் அடைந்தார்.
மறைந்த தலைமைக் காவலர் எம். சுப்பிரமணியத்தின் தியாகத்தைப் போற்றி, அவரது குடும்பத்தாருக்கு முதல்வரின் பொது நிவாரண நிதியிலிருந்து ரூ. 5 லட்சம் நிதியுதவி வழங்க முதல்வர் கருணாநிதி ஆணையிட்டுள்ளார் என்று கூறப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications