ஸ்டாலினை புறக்கணித்த மதுரை திமுக நிர்வாகிகள்!
மதுரை: நேற்றிரவு விமானம் மூலம் மதுரை வந்த துணை முதல்வர் மு.க.ஸ்டாலினை வரவேற்க மதுரை திமுக பிரமுகர்கள் யாரும் வரவில்லை. அதிகாரிகள் மட்டுமே அவரை வரவேற்று அழைத்துச் சென்றனர்.
திருநெல்வேலியில் நடக்கும் நிகழ்ச்சிகளில் பங்கேற்க ஸ்டாலின் இரவு 8.30 மணிக்கு விமானத்தில் மதுரை வந்தார். அவருடன் அமைச்சர்கள் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன், தங்கம் தென்னரசு ஆகியோரும் வந்தனர்.
அவர்களை வரவேற்க முன்னாள் அமைச்சர் பொன்.முத்துராமலிங்கம், முன்னாள் மாநகர் மாவட்டச் செயலாளர் வ.வேலுச்சாமி ஆகியோர் மட்டுமே வந்திருந்தனர்.
ஆனால், இப்போதைய மதுரை பகுதி திமுக மாவட்டச் செயலாளர்கள், எம்.எல்.ஏக்கள், எம்.பி.க்கள், மேயர் உள்ளிட்ட கட்சியின் நிர்வாகிகள் யாரும் வரவில்லை.
அவரை வரவேற்பதைத் தவிர்க்க திமுக மாவட்டச் செயலாளர்கள் உள்ளூரிலேயே இல்லாமல் வெளியே சென்றுவிட்டது தெரியவந்தது.
இதனால் ஸ்டாலினை மாவட்ட ஆட்சியர், மதுரை சரக டி.ஐ.ஜி., எஸ்.பி. உள்ளிட்டோர் தான் வரவேற்று அழைத்துச் சென்றனர்.
இதையடுத்து கார் மூலம் அவர் திருநெல்வேலி சென்றார்.












Click it and Unblock the Notifications