பி.இ: விண்ணப்பிக்க நாளை மறுதினம் கடைசி நாள்
Subscribe to Oneindia Tamil
சென்னை: பொறியியல் கல்லூரிகளில் சேருவதற்கு விண்ணப்பிக்க நாளை மறுதினம் கடைசி நாளாகும்.
2010-11ம் ஆண்டுக்கான பி.இ, பி.டெக் மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்பங்கள் தமிழ்நாடு முழுவதும் அரசுப் பொறியியல் கல்லூரிகள், பாலிடெக்னிக்குகள், அண்ணா பல்கலைக்கழகங்கள் மூலம் விற்பனை செய்யப்படுகின்றன.
விண்ணப்பங்களை வாங்க இனறே கடைசி தினமாகும். பூர்த்தி செய்த விண்ணப்பங்களை சமர்பிக்க நாளை மறுநாள் (31ம் தேதி) கடைசி நாள்.
இந் நிலையில் தமிழ்நாடு முழுவதும் நேற்றுவரை 2,01,184 விண்ணப்பங்கள் விற்பனையாகியுள்ளன. நேற்று வரை 42,000 பேர் விண்ணப்பித்துள்ளனர்.
அரசு, தனியார் பொறியியல் கல்லூரிகளில் கலந்தாய்வின் கீழ் 1 லட்சத்து 8000 என்ஜினீயரிங் சீட்டுகள் உள்ளன என்று சென்னை அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் டாக்டர் மன்னர் ஜவகர் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications