ஹெட்லியை விசாரிக்க இந்தியக் குழு நாளை அமெரிக்கா பயணம்

லஷ்கர் இ தொய்பா தீவிரவாத இயக்கத்திற்காக பல்வேறு சதித் திட்டங்களைத் தீட்டியதாக ஹெட்லி மீது சிகாகோ நீதிமன்றத்தில் வழக்கு நடந்து வருகிறது.
இந்த விசாரணையின் போது, மும்பை தீவிரவாதத தாக்குதல் சம்பவத்தில் தனக்கு தொடர்பு இருப்பதை ஹெட்லி ஒப்புக்கொண்டார்.
இதையடுத்து ஹெட்லியை விசாரிக்க இந்தியா அனுமதி கோரியது. ஆனால், அமெரிக்கரான ஹெட்லியை விசாரிக்க இந்தியாவுக்கு அனுமதி தர அமெரிக்கா பெரும் இழுத்தடிப்புகளைச் செய்தது.
இதுகுறித்து உள்துறை, வெளியுறவுத்துறை அதிகாரிகள், அமைச்சர்கள் மற்றும் தூதர்கள் மட்டத்தல் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு, இறுதியில் அமெரிக்க அதிபர் ஒபாமாவிடம் பிரதமர் மன்மோகன் சிங் கோரிக்கை வைத்ததையடுத்து இப்போது ஹெட்லியை விசாரிக்க அனுமதி தரப்பட்டுள்ளது.
இதையடுத்து ஹெட்லியை விசாரிக்க நடத்துவதற்காக இந்திய புலனாய்வு குழுவைச் சேர்ந்த 4 அதிகாரிகள் நாளை அமெரிக்கா செல்கின்றனர்.












Click it and Unblock the Notifications