ரயில் விபத்திலும் 'அரசியல் நடத்தும்' மம்தா பானர்ஜி!
கொல்கத்தா: மேற்கு வங்கத்தில் ரயிலைக் கவிழ்த்தது 'மாணிக்கபுரா லோதாசுளி' என்ற நக்ஸலைட் அமைப்பு என்று தெரியவந்துள்ள நிலையிலும், பழியை இடதுசாரிகள் மீது போட்டு, இந்த விவகாரத்தில் முடிந்தவரை அரசியல் லாபம் பெறும் செயலில் ரயில்வே அமைச்சர் மம்தா பானர்ஜி ஈடுபட்டு்ள்ளார்.
மேற்கு வங்கத்தில் உள்ளாட்சித் தேர்தல் நடந்து வரும் நிலையில், அதில் வெற்றி பெறுவதற்காக ரயில் கவிழ்ப்புக்கும் ஆளும் கம்யூனிஸ்ட்டுகளுக்கும் தொடர்பு இருப்பதாகப் பேசியுள்ளார்.
ரயில் கவிழ்ப்பு மூலம் தனது பெயரைக் கெடுக்க முயற்சி நடந்துள்ளது என்றரீதியில் பேசியுள்ள அவர் இது குறித்து சிபிஐ விசாரணையைக் கோரியுள்ளார். இதையடுத்து மத்திய அரசும் சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட முன்வந்துள்ளது.
அவர் கூறுகையில், இந்த ரயில் கவிழ்ப்பு சம்பவத்தை யார் நடத்தியிருந்தாலும், இந்த நாசவேலைக்கு அரசியல் சதியே காரணம் ஆகும். மேற்கு வங்காளத்தில் உள்ளாட்சி தேர்தல் நடைபெறுவதற்கு முன் இந்த சம்பவம் நடைபெற்றுள்ளது.
அரசியல்ரீதியில் எங்களுக்கு எதிராக உள்ள யாரோ இதைச் செய்திருக்கலாம். யாரோ ஒருவருடைய அரசியல் ஆதாயத்துக்காக இதுபோன்ற செயல்களில் ஈடுபடுவது மிகவும் மோசமான செயல். மக்களின் உயிருடன் விளையாடுபவர்களை மன்னிக்கவே முடியாது.
இந்த ரயில் விபத்து பற்றி சிபிஐ விசாரணை நடத்தக் கோரி ரயில்வே துறையின் சார்பில் உள்துறை அமைச்சகத்துக்கு கடிதம் எழுதியிருந்தோம். அதை ஏற்று சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட மத்திய அரசு சம்மதம் தெரிவித்துள்ளது.
ஞானேஸ்வரி எக்ஸ்பிரஸ் ரயில் தடம்புரண்டு கவிழ்வதற்கு சிறிது நேரத்திற்கு முன் அந்த வழியாக 3 ரயில்கள் சென்றுள்ளன. எனவே நாசவேலையில் ஈடுபட்டவர்கள் ரயில்கள் செல்லும் நேரத்தை கண்காணித்து ஒரு சில நிமிடங்களுக்குள் தங்கள் சதிச்செயலை நிறைவேற்றியிருக்கிறார்கள்.
அது வெல்டிங் செய்யப்பட்ட ரயில் பாதை என்பதால், அகற்றுவதற்கு அந்த இடத்தில் தண்டவாளத்தை இணைக்கும் பிஷ் பிளேட்டுகள்' எதுவும் கிடையாது. எனவே அதை நீக்கி ரயிலை கவிழ்க்கவில்லை. தண்டவாளத்தின் ஒரு பகுதியையே நீக்கி தான் ரயில் கவிழ்க்கப்பட்டுள்ளது என்றார்.
மேலும் இந்த விபத்துக்கு நக்ஸல் அமைப்புகள் காரணமா என்ற கேள்விக்கு, மம்தா பதிலளிக்காமல் மழுப்பினார்.
விபத்துக்கு காரணம் யார் என்பதை கண்டுபிடிக்க வேண்டிய பொறுப்பு மேற்கு வங்காள அரசுக்கு உள்ளது என்றார் சுற்றிவளைத்து.
மம்தாவின் இந்தப் பேச்சுக்கு இடதுசாரிகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
இது குறித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மூத்த தலைவர் சீதாராம் யெச்சூரி கூறுகையில், இடதுசாரி கட்சிகளை நோக்கி மம்தா பானர்ஜி குற்றச்சாட்டை கூறியிருப்பது மிகவும் துரதிருஷ்டமானது, அசட்டுத்தனமானது.
தன்னுடைய குறைகளை மறைக்க அவர் இவ்வாறு பேசி வருகிறார். இதன் மூலம் மம்தா பானர்ஜி தனது உண்மையான குற்றவாளிகளை பாதுகாக்க முயற்சிக்கிறார் என்றார்.
இதற்கிடையே ஞானேஸ்வரி எக்ஸ்பிரஸ் கவிழ்க்கப்பட்டது குறித்து அதன் டிரைவர் டி.கே.தாஸ், மேற்கு வங்க மாநிலம் ஜர்கிராம் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன்படி முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டுள்ளது.
அதில், ஞானேஸ்வரி எக்ஸ்பிரஸ் ரயில் விபத்தில் சிக்கியதற்கு அடையாளம் தெரியாத நபர்கள் காரணம் என்றும், ரயில் கவிழ்வதற்கு முன் பலத்த வெடிச்சத்தம் கேட்டதாக டிரைவர் தெரிவித்ததாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
-
அமெரிக்காவை அசரடித்த அம்பானி.. ரூ.27 லட்சம் கோடி முதலீடு செய்யும் ரிலையன்ஸ்.. டிரம்ப் அறிவிப்பு -
எங்க கொண்டு போய் விட்டுடுச்சி பாருங்க.. கேஸ் தட்டுப்பாட்டால், ஸ்விக்கி, ஜொமோட்டோ டெலிவரி குறைந்தது! -
7 பொதுத்தொகுதி + 2 தனித்தொகுதி.. அதிமுக கூட்டணியில் டிடிவிக்கு ஒதுக்கப்படும் தொகுதிகள் இதுதான்! -
அமெரிக்கா இனி பிக்பாஸ் இல்லை.. நீங்க நம்பலைனாலும் அதான் நெசம்.. ஐக்கிய அரபு சகாப்தமும் வீழ்ந்தது! -
பிரேமலதாவிற்கு திமுகவின் அடுத்த ‘சர்ப்ரைஸ்'.. தேமுதிகவிற்கு தாராளம் காட்டும் ஸ்டாலின்.. காங்கிரஸ்க்கு அடி -
3 கோடி பீப்பாய் கச்சா எண்ணெய்யை வாங்கி குவித்த இந்திய நிறுவனங்கள்! ரஷ்யாவுக்கு கொட்டும் பண மழை! -
இந்திய கப்பலுக்கு மட்டும் வழிவிட்ட ஈரான்.. ஹார்முஸ் ஜலசந்தியை கடந்து மும்பை வந்தடைந்த கப்பல் -
கடலில் இறக்கப்பட்ட கண்ணி வெடி! எக்குத்தப்பாய் வந்து சிக்கிய அமெரிக்கா! வால் ஸ்ட்ரீட் ஜர்னல் வார்னிங் -
ஒருவேளை உண்மையா இருக்குமோ.. என்டிஏ கூட்டணியில் விஜய்! மாஜி அமைச்சர் கடம்பூர் ராஜூ சொன்ன வார்த்தை! -
துணை முதல்வர் எல்லாம் ஜூனியர் ஆர்ட்டிஸ்ட் வேலை.. 2.5 வருஷம் முதல்வர் பதவி.. பாஜகவிடம் விஜய் டிமாண்ட் -
தமிழகத்தில் மீண்டும் ஆட்சியை பிடிக்கும் ஸ்டாலின்! 2-வது இடம் யாருக்கு? வெளியான புதிய கருத்துக்கணிப்பு -
சிறகடிக்க ஆசை: முத்து மீனாவுக்கு நடந்த நல்ல விஷயம்! விஜயாவுக்கு இனி தான் பிரச்சனை! ரோகிணியின் அடுத்த பிளான்












Click it and Unblock the Notifications