லாகூர் மருத்துவமனையில் தீவிரவாத தாக்குகல் - 12 பேர் பலி
Subscribe to Oneindia Tamil
இஸ்லாமாபாத்: போலீஸ் சீருடையில் லாகூர் மருத்துவமனைக்குள் புகுந்த தீவிரவாதிகள் தாறுமாறாக சுட்டதில் 12 பேர் கொல்லப்பட்டனர். பலர் காயமடைந்தனர். சிலரை பிணைக் கைதிகளாக பிடித்துக் கொண்டு அந்த மர்ம நபர்கள் தப்பி ஓடி விட்டனர்.
லாகூரில் உள்ள ஜின்னா மருத்துவமனையில் இந்த தாக்குதல் சம்பவம் நடந்தது.
கடந்த வெள்ளிக்கிழமை லாகூரில் உள்ள இரு மசூதிகளில் தீவிரவாத தாக்குதல் நடந்தது. இதில் காயமடைந்த ஒரு தீவிரவாதி இந்த மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.
அவரை மீட்கவே போலீஸ் சீருடையில் தீவிரவாதிகள் வந்ததாக தெரிகிறது. ஆனால் தீவரவாதியை மீட்கும் முயற்சி தோல்வியில் முடிந்துள்ளதாக லாகூர் போலீஸ் கமிஷனர் டோகார் தெரிவித்துள்ளார்.
மருத்துவமனையில் நடந்த தாக்குதல் சம்பவத்தில் கொல்லப்பட்டவர்களில் 3 பேர் போலீஸார் ஆவர்.












Click it and Unblock the Notifications