செங்கல்பட்டு மருத்துவக் கல்லூரி முன்னாள் முதல்வர் தற்கொலை
Subscribe to Oneindia Tamil
செங்கல்பட்டு: செங்கல்பட்டு அரசு மருத்துவக் கல்லூரியில் முதல்வராகப் பணியாற்றி ஓய்வு பெற்ற டாக்டர் முத்துக்கிருஷ்ணன் தூக்குப் போட்டுத் தற்கொலை செய்து கொண்டார்.
டாக்டர் முத்துக்கிருஷ்ணனுக்கு வயது 70 ஆகும். செங்கல்பட்டு அழகேச நகரில் வசித்து வந்தார். நீரிழிவு நோய் சிறப்பு மருத்துவராக விளங்கிய முத்துக்கிருஷ்ணன், செங்கல்பட்டு மற்றும் சுற்றுப் பகுதிகளில் பிரபலமானவர்.
சில நாள்களுக்கு முன், இவரது மருமகன் இறந்துள்ளார். இதனால் மகள் வாழ்க்கை கேள்விக் குறியாகிவிட்டதை எண்ணி வேதனையில் இருந்து வந்தார்.
வேதனை தாங்காமல் மே 24-ம் தேதி தூக்குப் போட்டுக் கொண்டார். உடனடியாக அவரை மீட்டு சென்னை மியாட் மருத்துவமனையில் சேர்த்தனர். ஆனால் திங்கள்கிழமை அவர் உயிரிழந்தார்.












Click it and Unblock the Notifications