குடிநீரில் கழிவு நீர்: வடசென்னையில் காலரா- ஜெயலலிதா புகார்

அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
பாதுகாப்பற்ற குடிநீர் வினியோகம் மற்றும் சுகாதாரக் கேடு காரணமாக வட சென்னை மாவட்டத்தைச் சேர்ந்த மக்கள் பாதிக்கப்பட்டு இருக்கிறார்கள். குடிநீருடன் கழிவு நீர் கலப்பதற்கு முக்கிய காரணம் கழிவுநீர் அடைப்பு ஏற்பட்டவுடன் அதை உடனடியாக சரிசெய்யாதது தான் என்றும்,
இது போன்ற சுகாதாரமற்ற குடிநீரை பருகியதன் காரணமாக தண்டையார் பேட்டை, புளியந்தோப்பு பகுதிகளைச் சார்ந்த நூற்றுக்கணக்கான மக்கள் வயிற்றுப் போக்கு, வாந்தி, பேதி, காலரா மற்றும் மர்ம காய்ச்சல் போன்ற நோய்களினால் பாதிக்கப்பட்டு எழுந்துகூட நடக்க முடியாத சூழ்நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளதாகவும்,
இந்த நோய்களினால் பாதிக்கப்பட்ட வறுமைக் கோட்டிற்குக் கீழுள்ள ஏழை, எளிய மக்கள் உணவுக்கு கூட வழியில்லாமல் கஷ்டப்படுவதாகவும், ஒரு பக்கம் நோயினால் பாதிப்பு மற்றொரு பக்கம் ஊதிய இழப்பு என இரட்டை துன்பத்திற்கு மக்கள் ஆளாக்கப்பட்டு இருப்பதாகவும் அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.
இவ்வாறு பாதிக்கப்பட்ட மக்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்வதால், தண்டையார்பேட்டை அரசு தொற்றுநோய் மருத்துவமனையில் அனைத்துப் படுக்கைகளும் நிரம்பி வழிகின்றன என்றும், ஒரே படுக்கையில் இருவரை படுக்க வைத்து சிகிச்சை அளிக்கப்படுவதாகவும் தகவல்கள் வருகின்றன.
குடிநீருடன் கழிவு நீர் கலப்பதைத் தடுத்து நிறுத்தாத திமுக அரசைக் கண்டித்து வட சென்னை மாவட்டக் கழகத்தின் சார்பில் இரண்டு முறை கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடத்தப்பட்டும், அப்போதைக்கு இந்தப் பிரச்சனையைத் தீர்க்க நடவடிக்கை எடுக்கப்பட்டதே தவிர, நிரந்தரத் தீர்வு காணும் நடவடிக்கையை அரசு எடுக்கவில்லை.
எனவே, வட சென்னை மாவட்டத்திற்கு உட்பட்ட பகுதிகளில், குடிநீருடன் கழிவு நீர் கலப்பதைத் தடுத்து நிறுத்தாமலும், கழிவு நீர் அடைப்பை சரி செய்யாமலும் இருந்ததன் விளைவாக, காலரா மற்றும் மர்மக் காய்ச்சல் உள்ளிட்ட பல்வேறு நோய்களுக்கு மக்கள் ஆட்பட்டு அவதியுறுவதற்குக் காரணமான மைனாரிட்டி திமுக அரசைக் கண்டித்தும்,
பாதுகாக்கப்பட்ட குடிநீர் வழங்க வலியுறுத்தியும், வட சென்னை மாவட்ட அதிமுக சார்பில், 5ம் தேதி சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும்.
இந்தக் கண்டன ஆர்ப்பாட்டம், கழக மருத்துவ அணிச் செயலாளர் டாக்டர் வேணுகோபால் எம்.பி. தலைமையிலும், வட சென்னை மாவட்டக் கழகச் செயலாளர் பி.கே. சேகர்பாபு, எம்.எல்.ஏ. முன்னிலையிலும் நடைபெறும் என்று கூறியுள்ளார் ஜெயலலிதா.
-
விரால் மீனின் ஸ்பெஷாலிட்டி இது.. பாம்பு தலையன் மீனுக்குள் அற்புதமான சீக்ரெட்! பெண்களின் வரப்பிரசாதம் -
ஜான் ஆரோக்கியசாமி போட்ட மெகா ஸ்கெட்ச்.. மிரண்டு போன பாஜக மேலிடம்.. B டீம் முத்திரையை உடைப்பாரா விஜய் -
திரிஷா சர்ச்சை அடங்குவதற்குள் மீண்டும் பரபரப்பு… காதல், கள்ளக்காதல் பற்றி பார்த்திபன் ஓபனாக பேச்சு -
அதிமுக எம்பியாக இருந்தபோதே கனிமொழி அக்கா எனக்கு பயிற்சி கொடுத்தார்.. ஓ.பி. ரவீந்திரநாத் -
சிறகடிக்க ஆசை: விஜயாவை பழிதீர்த்த கர்மா.. முத்துவால் ஏற்பட்ட குழப்பம்.. சந்தோஷத்தில் ரோகிணி -
மீண்டும் தள்ளிப்போகும் தேர்தல் தேதி அறிவிப்பு.. பின்னணியில் 3 காரணங்கள்.. தமிழகம் உள்பட 5 மாநில வாக்குப்பதிவு எப்போது? -
தவெகவில் பணக்கஷ்டம்.. ரூ.5 கோடி செலவு செய்ய வேட்பாளர்கள் இல்லை.. கூட்டணி செல்வது தான் சரி.. விஜய்க்கு அழுத்தம் -
Rasi Palan: கடகம், சிம்மம், கன்னிக்கு மார்ச் மாதத்தில் அடிக்குமா ஜாக்பாட்.. முழு பலன்கள் விவரம் -
அதில் இருந்தது கோழி கால் இல்லை.. சொமாட்டோ பிரியாணி பார்சலில் இருந்தது? அலற விட்ட 28 நிமிட வீடியோ -
சிங்காநல்லூர் வாய்ப்பில்லை.. பல்லடம் தொகுதியில் அண்ணாமலையை நிற்க சொல்லுங்க.. மறுக்கும் அதிமுக! -
Rasi Palan: துலாம், விருச்சிகம், தனுசு ராசிக்கான மார்ச் மாத பலன்.. முழு விவரம் இதோ -
வேளச்சேரி- பரங்கிமலை ரயில்.. மிகப்பெரிய சம்பவத்தை 'சைலண்ட்' ஆக செய்த மத்திய அரசு.. பின்னணி












Click it and Unblock the Notifications