60% கீழ் தேர்ச்சி கண்ட அரசு பள்ளிகளுக்கு நோட்டீஸ்
சென்னை: பத்து மற்றும் பிளஸ்டூ தேர்வில் 60 சதவீதத்திற்கும் குறைவான தேர்ச்சி கண்ட அரசுப் பள்ளிகளிடம் விளக்கம் கேட்டு தமிழக அரசின் கல்வித்துறை நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
பிளஸ் 2 தேர்வு முடிவு கடந்த மாதம் 14 ந் தேதியும், எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு முடிவு 26 ந்தேதியும் வெளியானது. பிளஸ் 2 தேர்வில் 85.2 சதவீதம் பேரும், எஸ்.எஸ்.எல்.சி. தேர்வில் 82.5 சதவீதம் பேரும் தேர்ச்சி பெற்றுள்ளனர். பொதுவாக பொதுத்தேர்வுகளில் அரசு பள்ளிகளில் தேர்ச்சி விகிதம் குறைவாக இருப்பதாக பரவலாக ஒரு குற்றச்சாட்டு இருந்து வருகிறது.
இந்த ஆண்டு விழுப்புரம் மாவட்டம் தேர்ச்சி விகிதத்தில் மிகவும் பின்தங்கி உள்ளது ஆய்வில் கண்டறியப்பட்டது. இந்த நிலையில், எஸ்.எஸ்.எல்.சி. பிளஸ் 2 தேர்வுகளில் 60 சதவீதத்திற்கு குறைவாக தேர்ச்சி பெற்ற அரசு பள்ளிகளுக்கு விளக்கம் கேட்டு பள்ளிக்கல்வித்துறை நோட்டீஸ் அனுப்பி உள்ளது.
குறைவான தேர்ச்சி விகிதம் பெற்றதற்கான காரணங்களை 15 நாட்களுக்குள் தெரிவிக்குமாறு மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகள் மூலமாக அனைத்து அரசு பள்ளிகளுக்கும் சுற்றறிக்கை அனுப்பப்பட்டு இருக்கிறது.
தேர்ச்சி குறைவுக்கு அளிக்கப்படும் காரணங்கள் ஏற்றுக் கொள்ளும்படியாக இருந்தால் தலைமை ஆசிரியர்கள் மற்றும் சம்பந்தப்பட்ட ஆசிரியர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படாது. அதற்குப் பதிலாக தேர்ச்சி விகிதத்தை அதிகரிக்க என்னென்ன செய்யலாம் என்பது குறித்து ஆசிரியர்களுக்கு ஆலோசனை வழங்கப்படும்.
தேர்ச்சி குறைவுக்கு தெரிவிக்கப்படும் காரணங்கள் நம்பும்படியாக இல்லாவிட்டால் இடமாற்றம் உள்ளிட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும் பள்ளிக் கல்வித்துறை உயர் அதிகாரிகள் தெரிவித்தனர்.
தேர்ச்சி குறைந்த பள்ளிகள் மீது நடவடிக்கை எடுக்கும் அதே நேரத்தில் சிறந்த பள்ளிகளை கவுரவிக்கவும் பள்ளிக் கல்வித் துறை முடிவு செய்துள்ளது. அதன்படி, எஸ்.எஸ்.எல்.சி. பிளஸ் 2 தேர்வுகளில் 100 சதவீத தேர்ச்சி பெற்ற பள்ளிகளை தேர்வு செய்து ரூ.2 ஆயிரம் பரிசு மற்றும் பாராட்டுச்சான்றிதழ்கள் வழங்கப்படும்.
சிறப்பாக பணியாற்றும் ஆசிரியர்களை ஊக்கப்படுத்துவதற்காக இந்த முயற்சி மேற்கொள்ளப்பட்டிருப்பதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.
மேலும், 100 சதவீத தேர்ச்சி பெற்ற பள்ளிகளின் தலைமை ஆசிரியர்கள் மற்றும் பாட ஆசிரியர்களைக் கொண்டு தேர்ச்சி குறைந்த பள்ளி ஆசிரியர்களுக்கு சிறப்பு பயிற்சி அளிக்கவும் பள்ளிக்கல்வித்துறை முடிவு செய்துள்ளது.
-
காங்கிரஸ் தலைவர் பதவியில் இருந்து விலகுகிறேன்.. அறிவித்தார் செல்வபெருந்தகை! பின்னணி இதுதான் -
30 வருடமாக "டிமிக்கி" கொடுத்த பாகிஸ்தான்.. உடனே ரூ.32,459 கோடி கடனை தர வேண்டும்.. UAE விதித்த கெடு -
Jayalalitha: நானும் ஜெயலலிதாவும் சர்ச் பார்க் பள்ளியில்தான் படித்தோம்! மணப்பாறையில் கனிமொழி பேச்சு -
திண்டுக்கல் எஸ்ஐக்கு மனமகிழ் மன்றத்தில் இருந்து வந்த அழைப்பு.. கனவிலும் நினைக்காத சம்பவம் -
ரஷ்ய கஜானாவில் அடி.. இந்தியாவுக்கு ஓடி வந்த புடின் அரசு.. LPG பிரச்சனைக்கு வழிபிறந்தது? -
கருணாநிதி என்ற என் இயற்பெயரை கருணாஸ் என மாற்றினேன்.. அந்த பெயர் தான் மீண்டும் எனக்கு.. : கருணாஸ் -
"ஹார்முஸ் மோதலில்.. மாலுமிகளை இழந்த ஒரே நாடு நாங்கள் தான்.." போருக்கு நடுவே இந்தியா சொன்ன வார்த்தை -
உதயநிதி மகனின் சொத்து, விஜய் மகனுக்கு தந்த கடன்.. கார்த்தி சிதம்பரம் சொன்ன முக்கியமான பாயிண்ட் -
சிறகடிக்க ஆசை: விஜயாவை லெப்ட் ரைட் வாங்கிய மீனா.. அண்ணாமலை கொடுத்த ஐடியா! மாஸ் காட்டிய முத்து -
இந்தோனேஷிய கடலில் அது பாட்டுக்கு போகுது.. உலகமே வியப்பில் உறைந்திருச்சு! விலகிய 40 கோடி வருஷ மர்மம் -
விலகினார் திருமாவளவன்.. சட்டசபை தேர்தலில் போட்டியில்லை என அறிவிப்பு.. பின்வாங்கியது ஏன்? விளக்கம் -
அடுத்தடுத்து அண்ணாமலையை சந்தித்த கோவை அதிமுக வேட்பாளர்கள்.. டெல்லிக்கு வேலுமணி க்ளியர் மெசேஜ்












Click it and Unblock the Notifications