கர்நாடகத்தில் ரூ.32,000 கோடி ஆர்செலார் மிட்டலின் ஸ்டீல் தொழிற்சாலை!
இதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் வியாழக்கிழமை பெங்களூரில் நடந்து வரும் சர்வதேச முதலீட்டாளர்கள் மாநாட்டில் கையெழுத்தானது.
கடந்த ஜனவரியிலேயே இந்த ஒப்பந்தம் கையெழுத்தாக இருந்தது. ஆனால், சில காரணங்களால் தள்ளிப் போனது.
இந்த ஒப்பந்தம் குறித்து ஆர்செலார் மிட்டல் தலைவர் லட்சுமி மிட்டல் கூறுகையில், கர்நாடகத்தில் நல்ல வளர்ச்சிக்கான அறிகுறிகள் தெரிந்ததால் முதலில் இங்கே துவங்குகிறோம். மற்ற பகுதிகளை கவனித்து வருகி்றோம்..." என்றார்.
ஆர்செலார் மிட்டல் நிறுவனமும், தென் கொரியாவின் போஸ்கோவும் கிழக்கு மாநிலங்களில் 37 லட்சம் டன் உற்பத்தி திறன் கொண்ட ஸ்டீல் தொழிற்சாலைகளை அமைக்க முயன்று வருகின்றன. ஆனால் விவசாயிகள் மற்றும் சுற்றுச் சூழல் ஆர்வலர்களின் தொடர்ச்சியான போராட்டங்கள் காரணமாக இந்த தொழிற்சாலை முயற்சி தள்ளிப் போனது. எனவே தற்போது தென் மாநிலங்களில் கவனம் செலுத்த ஆரம்பித்துள்ளனர்.
கர்நாடக தலைநகர் பெங்களூரின் சுற்றுப் புறப் பகுதிகளில் மட்டும் 3.4 பில்லியன் இரும்புத் தாது காணப்படுகிறது. நாட்டிலேயே இரண்டாவது பெரிய இரும்புத் தாது இருப்பு இதுதான். 2010ல் 25 மில்லியன் இரும்பை உற்பத்தி செய்யத் திட்டமிடப்பட்டுள்ளதாக மாநில அரசு தெரிவித்துள்ளது.
"இந்தியாவுக்கு ஏராளமான அளவு இரும்பு தேவைப்படுகிறது. அந்த அளவு வளர்ச்சிப் பணிகள் நடக்கின்றன. அதனால் இன்னும் நிறைய உற்பத்தி செய்ய வேண்டியுள்ளது.." என்றார் மிட்டல்.
நேற்று நடந்த மாநாட்டில் 400 முதலீட்டாளர்கள் மாநில அரசுடன் பல்வேறு ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டனர். இவற்றின் மொத்த மதிப்பு ரூ 3.5 ட்ரில்லியன். இந்த முதலீட்டாளர்களில் இன்போஸிஸ் மற்றும் விப்ரோவும் அடங்குவர்.
-
ராயல் என்பீல்டு முதலீடு ஆந்திரா சென்றதா? அமைச்சர் கீர்த்தனா பற்றி உண்மையை உடைத்த MP மாணிக்கம் தாகூர் -
"அமைச்சர் ஆதவ் அர்ஜுனாவை பதவிநீக்கம் செய்ய வேண்டும்”.. முதல்வர் விஜய்க்கு கிருஷ்ணசாமி வைத்த கோரிக்கை -
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
"எதிரிகள் சர்வ நாசம்".. எம்ஜிஆர், ஜெ., பாணியில் விஜய்.. கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்கு செல்வது ஏன்? பின்னணி -
தங்கப்பத்திரத்தில் 1.50 கோடி முதலீடு செய்தவர்களுக்கு 6 கோடி தந்த மத்திய அரசு.. லாபம் 4.85 கோடி -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
"3 சேனல்கள் நீக்கம் இல்லை.. தொழில்நுட்ப கோளாறால் தற்காலிக ஒளிபரப்பு பாதிப்பு” - அமைச்சர் ராஜ்மோகன் -
முதல்வர் விஜய்யின் முதல் அரசு நிகழ்ச்சி.. ஒரே ஏஐ வீடியோவில் இத்தனை தமிழ்ப் பிழைகளா! -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
நேற்று இந்திரா, நாளை நேரு.. 62 வருட சாதனை முறியடிப்பு! மிக நீண்ட கால பிரதமர் என்ற வரலாறு படைத்த மோடி













Click it and Unblock the Notifications