கேரளாவுக்குக் கடத்தப்பட்ட 21 பசுக்கள் உள்பட 28 மாடுகள் பறிமுதல் - ஐஜி நேரில் நடவடிக்கை
கயத்தாறு: கேரளாவுக்கு லாரியில் கடத்திக் கொண்டு செல்லப்பட்ட 21 பசுக்கள் உள்ளிட்ட 28 மாடுகளை போலீஸார் பறிமுதல் செய்தனர். தென் மண்டல ஐஜியே நேரடியாக சோதனை நடத்தி இந்த மாடுகளை பறிமுதல் செய்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
தென்மண்டல ஐஜி கிருஷ்ணமூர்த்தி நெல்லைக்கு காரில் வந்து கொண்டிருந்தார். அப்போது கயத்தாறு சாலைபுதூர் அருகே அதிக அளவில் மாடுகளை ஏற்றி கொண்டு ஒரு லாரி சென்றது. அந்த லாரியை நிறுத்தி ஐஜி விசாரணை நடத்தினார்.
விசாரணையில் கடலூரில் இருந்து 21 பசுமாடுகள், 2 காளை மாடுகள், 5 கன்று குட்டிகளை கேரளாவுக்கு கொண்டு சென்றது தெரிய வந்தது. இதுகுறித்து நெல்லை புளுகிராஸ் அமைப்பு நல அதிகாரி சிவசூரிய நாராயணனுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
அவர் கொடுத்த புகாரின் பேரில் லாரி டிரைவர் செந்தில், சென்னையை சேர்ந்த சவுந்திரதாஸ், சிதம்பரத்தை சேர்ந்த சேகர், கடலூர் வீரபாண்டியன் ஆகிய 4 பேர் கைது செய்யப்பட்டனர். தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது.












Click it and Unblock the Notifications