பிரபல விழுப்புரம் ரெளடி மணிகண்டன் கைது
Subscribe to Oneindia Tamil
விழுப்புரம்: விழுப்புரத்தை கலக்கி வந்த பிரபல ரெளடி மணிகண்டன் கைது செய்யப்பட்டுள்ளான்.
இவனது தம்பி சமீபத்தில் கொலை செய்யப்பட்டதால் கடந்த ஒரு வாரமாக கடைகளைத் திறக்க விடாமல் இவன் அட்டகாசம் செய்தான். இதையடுத்து அவனைக் கைது செய்ய வந்த போலீசார் மீது வெடிகுண்டு வீசிவிட்டு தப்பியோடி விட்டான்.
இதையடுத்து அவனை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டது. மணிகண்டனும் அவன் கூட்டாளிகளுடன் குயிலாப்பாளையம் பகுதியில் முந்திரிக் காட்டில் மறைந்திருப்பதாக தகவல் வந்ததையடுத்து தனிப்படை அங்கு விரைந்தது.
அப்போது காட்டுக்குள் தப்பியோடிய மணிகண்டனை போலீசார் கைது செய்தனர். அவனது கூட்டாளிகள் 3 பேரும் தப்பியோடிவிட்டனர்.












Click it and Unblock the Notifications