செம்மொழி மாநாடு: பினாங்கு துணை முதல்வர் வர கூடாதுக்- தமிழக அரசு

இதுகுறித்து மத்திய உள்துறை அமைச்சக வட்டாரத் தகவல்கள் கூறுகையில், கோவையில் ஜூன் 23ம் தேதி தொடங்கி 27ம் தேதி வரை நடைபெறவுள்ள செம்மொழி மாநாட்டுக்கு ராமசாமி வருவதை தமிழக காவல்துறை விரும்பவில்லை.
இதுதொடர்பாக தமிழக தலைமைச் செயலாளர் கே.எஸ்.ஸ்ரீபதி, மத்திய உள்துறை செயலாளர் ஜி.கே.பிள்ளைக்கு ஒரு கடிதம் எழுதியுள்ளார். அதில், விடுதலைப் புலிகளுக்கு ஆதரவாக ராமசாமி பேசியிருப்பதை சுட்டிக் காட்டியுள்ளார்.
விடுதலைப் புலிகள் இயக்கத்தின் அழிவுக்கும், பிரபாகரனின் மறைவுக்கும் இந்தியத் தலைவர்களே காரணம் என்றும் ராமசாமி பேசியுள்ளார். இதையடுத்து ராமசாமியை இந்திய உளவுத்துறை தீவிரமாக கண்காணித்து வருகிறது.
அவரது கருத்துக்கள் கோபத்தை ஏற்படுத்துபவையாக உள்ளன. அவர் உலகத் தமிழ் செம்மொழி மாநாட்டுக்கு வராமல் இருந்தால் தமிழக காவல்துறையினர் மகிழ்ச்சி அடைவார்கள்.
விடுதலைப் புலிகளுக்கு ஆதரவான தலைவர்களை தமிழக அதிகாரிகள் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர். அவர்களுக்கு தமிழகத்தில் அடைக்கலம் கிடைத்து விடாமல் பார்த்து வருகின்றனர்.
நாங்கள் வெளிநாட்டினரை வரவேற்கிறோம். அதேசமயம், நமது விவகாரங்களில் அவர்கள் தலையிடுவதை ஏற்க முடியாது. இந்தியாவுக்கு எதிராக, அதுவும் இந்திய மண்ணுக்கு வந்து பேசுவதை அனுமதிக்க முடியாது என்று அவர்கள் தெரிவித்தனர்.
கடந்த பிப்ரவரி மாதம் ராமசாமி இந்தியாவுக்கு வந்திருந்தார். அப்போது அவர் ஈழத் தமிழர்கள் குறித்தும், ஈழத் தமிழர் போராட்டம் குறித்தும் தெரிவித்த கருத்துக்களையே தற்போது தமிழக அரசு ஆட்சேபித்து மத்திய அரசுக்கு கடிதம் எழுதியுள்ளது.
மேலும், விடுதைலப் புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரனின் தாயார் பார்வதி அம்மாளை மத்திய அரசு நாடு கடத்திய செயலையும் ராமசாமி கடுமையாக கண்டித்திருந்தார்.
இந்த நிலையில்தான் ராமசாமி கோவை மாநாட்டுக்கு வருவதற்கு தமிழக அரசு எதிர்ப்பு தெரிவித்துள்ளது.
ஆனால் தான் இந்த மாநாட்டில் கலந்து கொள்ளப் போவதில்லை என்று ஏற்கனவே ராமசாமி தெளிவுபடுத்தியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications