கேரளாவில் இன்று முதல் தீவிரமடைகிறகிறது தென் மேற்குப் பருவ மழை
திருவனந்தபுரம்: கேரளாவில் இன்று முதல் தென் மேற்குப் பருவ மழை தீவிரமடைந்துள்ளது.
கேரளாவில் வழக்கமாக ஜூன் முதல் வாரத்தில் தென்மேற்கு பருவ மழை தொடங்கும். ஆனால் இந்த வருடம் முன்கூட்டியே மே 30ம் தேதி பருவ மழை துவங்கியது. இதனால் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.
ஆனால் தொடங்கிய 2 நாட்களிலேயே மழை குறைந்து மீண்டும் வெயில் சுட்டெரிக்க தொடங்கியது. அரபி கடலில் மையம் கொண்ட பெட் புயல் தென்மேற்கு பருவ காற்றை வளைகுடா நாடுகளை நோக்கி கொண்டு சென்றதால் கேரளாவில் பருவ மழை முற்றிலும் குறைந்தது.
இந்நிலையில் தற்போது பெட் புயல் வழுவிழந்து விட்டதால் இன்று முதல் மீ்ண்டும் தென்மேற்கு பருவ மழை தீவிரம் அடையும் என்று வானிலை ஆராய்ச்சி மையம் தெரிவித்துள்ளது. அதற்கு அங்கு மழை வலுத்துள்ளது.
இதேபோல தமிழகத்தின் தென் கோடிப் பகுதிகளிலும், மதுரை, தேனி உள்ளிட்ட மாவட்டங்களிலும் நல்ல மழை பெய்துள்ளது.
சென்னை நகரில் நேற்று இரவு லேசான மழை பெய்தது. இன்று அதிகாலையில் சில இடங்களில் பலத்த மழை பெய்தது. காலையில், பெரும்பாலான பகுதிகளில் விட்டு விட்டு மழை பெய்தது.












Click it and Unblock the Notifications