வெப்பச் சலனத்தால் தமிழகத்தில் மழை - இன்றும் தொடரும்
சென்னை: வெப்பச் சலனம் காரணமாக தமிழகம் மற்றும் புதுவையில் பெய்து வரும் மழை மேலும் 24 மணி நேரத்திற்கு நீடிக்கும் என சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் எஸ்.ஆர்.ரமணன் தெரிவித்துள்ளார்.
கடும் வெயிலால் வறுபட்டு வந்த தமிழகத்தில் கடந்த 2 நாட்களாக வானிலை மாறியுள்ளது. பரவலாக பெய்து வரும் மழை காரணமாக வெப்பம் அடியோடு குறைந்துள்ளது.
வங்கக் கடலில் புயல் சின்னம் ஏதும் உருவாகாத நிலையில், இந்த திடீர் மழை குறித்து வானிலை ஆய்வு மைய இயக்குநர் ரமணன் கூறுகையில்,
வெப்பச் சலனம் காரணமாக கடந்த 24 மணி நேரத்தில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஓரிரு இடங்களில் மழை பெய்துள்ளது. அதிகபட்சமாக மணல்மேல்குடியில் 5 சென்டி மீட்டர் மழையும், குன்னூர், வால்பாறையில் தலா 4 சென்டி மீட்டர் மழையும் பெய்துள்ளது.
அடுத்த 24 மணி நேரத்தில், தமிழகம் மற்றும் புதுச்சேரியில் வெப்பச் சலனம் காரணமாக ஓரிரு இடங்களில் மழை பெய்யும் என்றார்.












Click it and Unblock the Notifications