ஊருக்குப் போய் சேர்ந்தார் 'தேடப்படும் குற்றவாளி டக்ளஸ்'!

இலங்கை மந்திரி டக்ளஸ் தேவானந்தா மீது சென்னையில் 3 வழக்குகள் உள்ளன. அவர் தேடப்படும் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டுள்ளார்.
இந் நிலையில் இலங்கை அதிபர் ராஜபக்சேவுடன் டெல்லிக்கு வந்த அவரை கைது செய்ய உத்தரவிடுமாறு சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டது.
இந்த மனு மீதான விசாரணையை நீதிமந்றம் திங்கள்கிழமைக்கு ஒத்தி வைத்தது.
இந் நிலையில், டெல்லியில் இருந்து டக்ளஸ் தேவானந்தா கொழும்பு திரும்பிவிட்டார். அதிபர் ராஜபக்சேவுடன் வந்த குழுவினரோடு சிறப்பு விமானத்தில் அவரும் கொழும்பு போய்ச் சேர்ந்தார்.
அவர் தேடப்படும் குற்றவாளி என்றும், இது குறித்து டெல்லி போலீசாருக்கு தகவல் அனுப்பியுள்ளதாகவும் சென்னை போலீஸ் கமிஷ்னர் ராஜேந்திரன் கூறியிருந்தார்.
வழக்கமாக குற்றவாளிகள் மற்ற மாநிலத்தில் இருந்தால் அவர்களைப் பிடிக்க தனிப் படையை தேடும் மாநிலம் அனுப்புவது வழக்கம்.
டக்ளஸைப் பிடிக்க எந்தப் படையும் அனுப்பப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இத்தனைக்கும் அவர் மீது கொலை, ஆள் கடத்தல் என மூன்று கிரிமினல் வழக்குகள் நிலுவையில் உள்ளன. குண்டர் சட்டத்தில் உள்ளே இருந்த டக்ளஸ், தனக்கு இந்திய-இலஙகை ஒப்பந்தம் மூலம் வழக்குகளில் இருந்து விடுதலை கிடைத்துவிட்டதாக அவராகவே கூறிக் கொண்டு ஊருக்குப் போய்விட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications