மத்தியிலும், மாநிலத்திலும் வெற்றிக் கூட்டணி தொடர்கிறது - வாசன்
சென்னை: மத்தியிலும், மாநிலத்திலும் காங்கிரஸ்- திமுக கூட்டணியின் வெற்றிக் கூட்டணி தொடர்வதாக மத்திய கப்பல்துறை அமைச்சர் ஜி.கே.வாசன் சந்தித்துப் பேசினார்.
இன்று கோபாலபுரம் இல்லம் சென்ற ஜி.கே.வாசன், முதல்வர் கருணாநிதியை சந்தித்துப் பேசினார். இது வழக்கமான மரியாதை நிமித்தமான சந்திப்புதான் என்று கூறப்பட்டது.
ஜி.கே.வாசன், மத்திய அமைச்சர் பதவியில் விருப்பமில்லாமல் இருப்பதாகவும், தமிழக காங்கிரஸ் தலைவர் பதவியில் மீண்டும் அமர விரும்பி மேலிடத்தை தொடர்ந்து வலியுறுத்து வருவதாகவும் முன்பு செய்திகள் வந்த நிலையில், முதல்வர் கருணாநிதியை அவர் சந்தித்திருப்பது குறிப்பிடத்தக்கது.
முன்னதாக, சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள அவரது இல்லத்தில் பள்ளி மாணவ-மாணவிகளுக்கு இலவச நோட்டு புத்தகங்கள் மற்றும் சீருடைகளை வழங்கினார். அப்போது செய்தியாளர்களிடம் வாசன் பேசுகையில்,
மத்தியில் ஐக்கிய முற்போக்கு கூட்டணியும், மாநிலத்தில் ஜனநாயக முற்போக்கு கூட்டணியும் தொடர்ந்து 6 வருடங்களாக, வெற்றி கூட்டணியாகவே செயல்பட்டு வருகிறது.
அதற்கு எடுத்துக்காட்டாக இரண்டு முறை நாடாளுமன்றத் தேர்தல், சட்டமன்ற தேர்தல், தமிழகத்தில் நடைபெற்ற உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல், சட்டமன்ற இடைத்தேர்தல்கள், உள்ளாட்சி இடைத்தேர்தல்களில் தொடர்ந்து இந்த கூட்டணி வெற்றி பெற்று வருகிறது.
ஐக்கிய முற்போக்கு கூட்டணியின் திட்டங்களுக்கும், செயல்பாட்டிற்கும் மக்கள் மத்தியில் வரவேற்பு பெருகி வருகிறது என்றார்.
-
சென்னையின் இருதயத்தில் நடக்கும்.. பைபாஸ் சர்ஜரி.. 100 கி.மீ சாலைகள் விரிவாக்கம்.. அடியோடு மாறுது! -
கிளாம்பாக்கம் புதிய ரயில் நிலையத்திற்கு.. 'கலைஞர்' பெயர்! தமிழ்நாடு அரசு ஒப்புதல் -
சென்னையிலுள்ள தங்கும் ஹோட்டல்கள் கேஸ் சிலிண்டர் தட்டுப்பாட்டை எப்படி சமாளிக்கின்றன தெரியுமா? -
“பாட்டிலுக்கு 10 ரூபாய்”: பாட்டில்களை திரும்ப பெறும் திட்டத்தை அமல்படுத்தாவிட்டால்- ஐகோர்ட் வார்னிங் -
பரங்கிமலை இன்று முதல் சென்னையின் ‘ஹாட்ஸ்பாட்’.. கடற்கரை - பரங்கிமலை பறக்கும் ரயில் அட்டவணை வெளியீடு! -
"ஸ்டாக் இல்லை" சென்னை கடைகளில் மளமளவென காலியாகும் இண்டக்ஷன் ஸ்டவ்-கள்! நேரடி கள ரிப்போர்ட்! -
வீட்டில் இருக்குற தண்ணி டேங்க் மட்டும் தான் கழட்டிட்டு வரல.. திரும்பி பார்க்க வைத்த சென்னைவாசி -
கேஸ் சிலிண்டர்கள் பறிமுதல் செய்யப்படும்.. தமிழக அரசு அதிரடி எச்சரிக்கை.. என்னாச்சு? -
பயப்பட வேண்டாம்.. தமிழ்நாட்டில் பெட்ரோல் தட்டுப்பாடே இல்லை.. பங்க் உரிமையாளர்கள் விளக்கம்! -
13 வயது சிறுமியை 15 பேர் பாலியல் வன்கொடுமை செய்த வழக்கு.. விசாரணையை சென்னைக்கு மாற்ற தந்தை கோரிக்கை -
உரிமைத் தொகை ₹1000 பதில் 2000 தந்தால்? சென்னை டூ திருச்சி சிறுமி சம்பவத்தில் பொங்கிய டிடிவி தினகரன் -
தமிழகத்தில் 5 ஆண்டுகளில் குற்ற சம்பவங்கள் குறைந்துள்ளன.. டேட்டாவுடன் உள்துறை செயலர் விளக்கம்












Click it and Unblock the Notifications