பாக்தாத் வங்கியில் கொள்ளை- அல் கொய்தா அட்டகாசம்- 16 பேர் பலி
பாக்தாத்: ஈராக் தலைநகர் பாக்தாத்தில் அரசுக்கு சொந்தமான சென்ட்ரல் பாங்கை கொள்ளையடிக்க அல் கொய்தா தீவிரவாதிகள் முயன்றனர். அப்போது ஏற்பட்ட துப்பாக்கிச் சண்டையில் 16 பேர் கொல்லப்பட்டனர்.
ராணுவ வீரர்கள் போன்று உடை அணிந்து வங்கியின் முன்வாசல் வழியாக நுழைந்த 3 தற்கொலை படை தீவிரவாதிகள், தங்கள் உடலில் கட்டியிருந்த குண்டுகளை வெடிக்க செய்தனர். இதற்கிடையில் 2-வது வாசல் வழியாக நுழைந்த 2 தீவிரவாதிகளை பாதுகாப்பு படையினர் சுட்டுக்கொன்றனர்.
வங்கிக்கு வெளியேயும் குண்டுகளை வெடிக்க செய்தனர் தீவிரவாதிகள். இதனால் அப்பகுதி கரும்புகையால் சூழப்பட்டது. இச்சம்பவத்தால் அங்கு பரபரப்பான சூழ்நிலை நிலவியது.
வங்கிக்குள் புகுந்த தீவிரவாதிகளுடன் பாதுகாப்பு படையினர் துப்பாக்கி சண்டையில் ஈடுபட்ட போது, அவர்கள் வங்கிக்கு தீவைத்து விட்டு தப்பி ஓடிவிட்டனர்.
இச்சம்பவத்தில் மொத்தம் 16 பேர் உயிரிழந்தனர். காயம் அடைந்தவர்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.












Click it and Unblock the Notifications