யூரோ மதிப்பு வீழ்ச்சியால் இந்தியாவில் முதலீடு அதிகரிக்கும்!-ரிசர்வ் வங்கி

Subscribe to Oneindia Tamil

Euro
மும்பை: யூரோ நாணய மதிப்பு வீழ்ச்சி மற்றும் யூரோ வலய நாடுகளின் பொருளாதாரக நெருக்கடி, இந்தியாவில் அதிக முதலீடுகளைக் கொண்டு வந்து சேர்க்கும் என்று ரிசர்வ் வங்கி துணை ஆளுநர் உஷா தோரட் தெரிவித்தார்.

சனிக்கிழமை செய்தியாளர்களைச் சந்தித்த உஷா, இதுபற்றி மேலும் கூறியதாவது:

"எங்கே அதிக பலன் கிடைக்கிறதோ அந்த இடத்தைத் தேடிப் போவது பணத்தின் இயல்பு. உலகில் நிச்சயமற்ற தன்மை கொண்ட நாடுகளிலிருந்து முதலீட்டாளர்கள் இந்தியாவைத்தேடி வரக் காரணம், இங்கு அவர்களின் முதலீட்டுக்கு அதிக லாபம் கிடைக்கும் என்ற நம்பிக்கைதான். காரணம் எத்தனை பெரிய நெருக்கடியையும் இந்தியப் பொருளாதாரம் வெற்றிகரமாக சமாளித்துள்ளது.

இந்திய வங்கிகள் வலுவுடன் திகழ்கின்றன. கவலை கொள்ளத் தேவையில்லை.

இதன் காரணமாக ஐரோப்பிய நாடுகளிலிருந்து பல முதலீட்டாளர்கள் இந்தியாவுக்கு வரும் சூழல் ஏற்பட்டுள்ளது. ஏற்கெனவே 5 பில்லியன் டாலர் முதலீடு பங்கு வர்த்தகம் மூலம் இந்தியாவுக்குள் வந்துள்ளது.

இந்தியா, சீனா நாடுகளின் வளர்ச்சி சிறப்பாக உள்ளது.

ரொக்க இருப்பு விகிதம் உள்ளிட்ட முக்கிய வட்டி விகிதங்களை உயர்த்துவது குறித்து வரும் ஜூலை 27-ம் தேதி வெளியாகும் வருடாந்திர பணவியல் கொள்கை அறிக்கையில் தெரியும்" என்றார் உஷா.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+