Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

போபால் விஷ வாயு வழக்கு: 10 நாளில் அறிக்கை தர அமைச்சர்களுக்கு பிரதமர் உத்தரவு

Subscribe to Oneindia Tamil

Manmohan Singh
டெல்லி: போபால் விஷ வாயு வழக்கு தொடர்பாக பத்து நாட்களுக்குள் தன்னிடம் அறிக்கை தருமாறு இதுதொடர்பாக அமைக்கப்பட்ட அமைச்சர் குழுவுக்கு பிரதமர் மன்மோகன் சிங் உத்தரவிட்டுள்ளார்.

போபால் விஷ வாயு வழக்கில் வெளியான தீர்ப்பு மக்களை கொதிக்க வைத்துள்ளது. இதை தற்போது எதிர்க்கட்சியினர் பெரும் பிரச்சினையாக்கி வருகின்றனர்.

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி, முன்னாள் அமைச்சரும், முன்னாள் மத்தியப் பிரதேச முதல்வருமான அர்ஜூன் சிங் ஆகியோரின் பெயர்களும் பலமாக அடிபடுகின்றன.

இந்த நிலையில் பிரதமர் மன்மோகன் சிங் இந்த விவகாரத்தில் நேரடியாக தலையிட்டுள்ளார். இந்த விவகாரம் தொடர்பாக ப.சிதம்பரம் தலைமையில் அமைக்கப்பட்டுள்ள 9 அமைச்சர்களைக் கொண்ட குழு உடனடியாக கூடி இதுகுறித்து ஆராயுமாறும், பத்து நாட்களுக்குள் தனக்கு அறிக்கை சமர்ப்பிக்குமாறும் பிரதமர் உத்தரவிட்டுள்ளார்.

கடந்த வாரம்தான் ப.சிதம்பரம் தலைமையிலான இந்தக் குழு அமைக்கப்பட்டது. போபால் வழக்கின் தீர்ப்புக்கு நிவர்த்தி தேட என்ன வழிகள் உள்ளன என்பது குறித்து ஆராயும் பணி இந்தக் குழுவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

இக்குழுவில் மத்திய அமைச்சர் மு.க.அழகிரியும் இடம் பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+