For Daily Alerts
Just In
சென்னை எழிலகத்தில் தீவிபத்து-அரசு ஊழியர்கள் வெளியேற்றம்
சென்னை: சென்னையில் உள்ள அரசு அலுவலக வளாகமான எழிலகத்தில் இன்று மாலை திடீர் தீவிபத்து ஏற்பட்டது. இதையடுத்து அரசு ஊழியர்கள் அவசரம் அவசரமாக வெளியேற்றப்பட்டனர்.
சென்னை கடற்கரை காமராஜர் சாலையில் எழிலகம் அமைந்துள்ளது. பத்துக்கும் மேற்பட்ட அரசு அலுவலகங்கள் அதில் உள்ளன. நூற்றுக்கணக்கான அரசு ஊழியர்கள் அதில் பணியாற்றுகின்றனர்.
இன்று மாலைவாக்கில் அங்கு திடீர் தீவிபத்து ஏற்பட்டது. இதையடுத்து அரசு ஊழியர்கள் வேகம் வேகமாக வெளியேற்றப்பட்டனர். பலர் அவசரம் அவசரமாக ஓடி வெளியேறினர்.
6 வாகனங்களில் வந்த தீயணைப்புப் படையினர் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். எழிலகத்தில் நடந்த தீவிபத்தால் கடற்கரைச் சாலையில் பரபரப்பு ஏற்பட்டது.
Comments
Story first published: Tuesday, June 15, 2010, 17:47 [IST]