சிறுமியைக் கற்பழித்து, படம் எடுத்த இளைஞருக்கு வலைவீச்சு
சென்னை: 13 வயது சிறுமியைக் கற்பழித்து, செல்போனில் படம் எடுத்து வைத்துக் கொண்ட வாலிபரைப் போலீஸார் தேடி வருகின்றனர்.
சென்னை, ராயபுரம் ஆண்டியப்பன் தெருவில் வசித்து வருபவர் சேகர். இவரது மகள் லதா. 13 வயதான லதா, 8ம் வகுப்பு படித்து வருகிறார். பல சமயங்களில் வீட்டில் லதா மட்டும் தனியாக இருப்பார். இதைப் பயன்படுத்திக் கொண்ட கொருக்குப்பேட்டையைச் சேர்ந்த ரி்ச்சர்ட் என்ற வாலிபர் லதாவை தனது வலையில் வீழ்த்தினார்.
இருவரும் நெருக்கமாக பழகியுள்ளனர். கல்யாணம் செய்து கொள்வதாக கூறி லதாவுடன் உறவும் கொண்டுள்ளார் ரிச்சர்ட். ஆனால் அதைச் செய்யாமல் கம்பி நீட்டி விட்டார்.
இதுகுறித்து லதாவின் தந்தை சேகர் போலீஸில்புகார் செய்தார். புகாரில் தனது மகளுடன் அந்தரங்கமாக இருந்ததை செல்போனில் ரிச்சர்ட் பதிவு செய்திருக்கலாம் என்று கூறியுள்ளார்.
இதையடுத்து ரிச்சர்டை போலீஸார் தீவிரமாக தேடி வருகின்றனர்.












Click it and Unblock the Notifications