நீர்கொழும்பில் அதிகரித்து வரும் ஓரினச் சேர்க்கையாளர் தொல்லை

Subscribe to Oneindia Tamil

Neerkozhumbu Beach
-ஆர்.நிர்ஷன்

இலங்கையின் கல்கிசை, நீர்கொழும்பு, சீதுவை ஆகிய பிரதேசங்களின் கரையோரப் பகுதிகளில் ஓரினச் சேர்க்கையாளர்களின் அட்டகாசம் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால் மக்கள் பெரும் அவதிக்குள்ளாகியுள்ளனர்.

சீதுவை கடற்கரையோரத்தில் ஓரினச் சேர்க்கையில் ஈடுபட்டிருந்த இளைஞர்கள் இருவரை நேற்று முன்தினம் போலீஸார் கைது செய்தனர். அவர்களை நீர்கொழும்பு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.

இந்த ஓரினச்சேர்க்கையாளர்களில் பலரும் 18 வயதுக்கு உட்பட்டவர்களாக உள்ளனர். போலீஸார் கோர்ட்டில் நிறுத்தியவர்களில் 2 பேர் 18 வயதுக்கு உட்பட்டவர்கள்.

கல்கிசை, நீர்கொழும்பு ஆகிய பகுதிகளின் கரையோரங்களில் ஏராளமான மதுபான விடுதிகளும் உல்லாசத் தளங்களும் காணப்படுகின்றன. சமூக சீர்கேடான நடவடிக்கைகள் அதிகரிக்க இவையும் காரணங்களாகும்.

நீர்கொழும்பில் வாழும் ஓரினச் சேர்க்கையாளர்கள் சேரிப்புறங்களில் வாடகைக்கு வீடு வாங்கி, வாழ்ந்து வருவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்தக் கும்பலைச் சேர்ந்தவர்கள் நள்ளிரவு நேரங்களில் கடற்கரைக்கு வருவோரை வற்புறுத்தி உறவுக்கு அழைப்பது, மறுத்தால் மிரட்டுவது என செயல்பட்டு வருகின்றனர்.

இவர்களின் பிடியில் பள்ளிக்கூட சிறார்களும் சிக்கும் அவலமும் நடக்கிறது.

இந்த சட்டவிரோத செயலை போலீஸார் மட்டுமே தனித்து இதனைக் கட்டுப்படுத்த முடியாது. ஓரினச் சேர்க்கைக்கு சிறுவர்களும் இளைஞர்களும் அடிமையாவது தடுக்கப்பட வேண்டியது அவசியம்.

மேற்குலக நாடுகளில் இதற்கான அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ள போதிலும், இலங்கை போன்ற கலாசார பாரம்பரியம் கொண்ட வளர்முக நாடுகளில் ஓரினச் சேர்க்கையானது எதிர் விளைவுகளையே தரக்கூடியதாக அமையும் என்பதில் சந்தேகமில்லை.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+